பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 125

ரெனவே,ஆண்மக்கள் பரிகசிப்ப ரென்பது கூறாதே அமையும்.  துணிவு
வேறுண்டோ என்றது - மீண்டுபோவது துணிவன் றென்பதைத் தெரிவிக்கும்.
வெல்லும் ஆற்றல் இலையேனும் முகத்திலும் மார்பிலும் விழுப்புண்பட்டாயினும்
மீண்டால் ஊறஞ்சாமை விளங்கு மென்றற்கு, 'புண்படாது மீண்டாலென்சொலார்'
எனப்பட்டது.  மகளிர் திரிகரணமும் வேறுபட அறியவொண்ணாத
நெஞ்சாழமுடையராதலால், அவர்க்கு 'வஞ்ச நெஞ்சுடை' என்ற அடைமொழி
கொடுக்கப்பட்டது; "ஆழாழியென்னவளவுபடா வஞ்ச நெஞ்சப், பாழான மாதர்"
என்றார் பின்னோரும்.  'வஞ்சியர்' என்ற சொல் - வஞ்ச முடையாராதல்பற்றி
அவர்க்கு இப்பெயர் அமைந்ததுபோலு மென்ற கருத்துத் தொனிக்க நிற்கும்.
'மறவோய்' என்று விளித்தது, உத்ஸாஹ முண்டாக்குதற் பொருட்டு.     (196)

38.நிலையுமுட்டியுநிலைபெறநின்றுநேர்படத்திண்
சிலைவளைத்துவெஞ்சிலீமுகஞ் சிற்சிலதொடுத்து
மலையிலக்கெனயாரையுமலைந்திடுமலைந்தால்
அலைகடற்புவியரசரிலாரெதிர்நிற்பார்.

      (இ -ள்.) (நீ),-நிலைஉம் - (போரில்) நிற்கும் நிலைமையும், முட்டி உம்-
கையில் ஆயுதங்களைப் பிடிக்குந் தன்மையும், நிலை பெற-
உறுதியாயிருக்கும்படி, நின்று - (தைரியத்தோடு) நின்று,-திண் சிலை - வலிய
வில்லை, நேர்பட - செவ்வையாக, வளைத்து - வணக்கி நாணேற்றி, சில் சில
வெம் சிலீமுகம் தொடுத்து - சிலசில கொடிய அம்புகளை எய்து,- மலை
இலக்கு என - மலை ஒப்பென்னும்படி [சிறிதுஞ் சலியாமல்], யாரைஉம் -
எவரையும், மலைந்திடு - எதிர்த்துப் போர்செய்; மலைந்தால் - (இவ்வாறு)
பொருதால், அலை கடல் புவி அரசரில் - அலைகின்ற கடலாற் சூழப்பட்ட
பூமியிலுள்ள அரசர்களுள், எதிர் நிற்பார் - (உன்) எதிரில் நிற்க வல்லவர்,
ஆர் - யாவருளர்? - (எ - று.) எல்லாரும் புறங்கொடுத்துப் போவரென்பதாம்.

    இதனால், அருச்சுனன் சிறிது தேறிய உத்தரனுக்குத் தைரியத்தை யூட்ட
முயல்கின்றான்.  நிலை - போரில் வில்வளைத்து அம்பினை எய்வார்க்கு உரிய
நிலை: அது - பைசாசம், மண்டலம், ஆலீடம், பிரதியாலீடம் என நான்கு
வகைப்படும்:  அவற்றுள், ஒருகால் நிலைநின்று ஒரு காலை முடக்கல் -
பைசாசநிலை; இருகாலும் பக்கல்வளைய மண்டலித்தல் - மண்டலநிலை;
வலக்கால் மண்டலித்து இடக்கால் முந்துறல் - ஆலீடநிலை; வலக்கால்
முந்துற்று இடக்கால் மண்டலித்தல் - பிரதியாலீடநிலை.  முட்டி = முஷ்டி:
கைப்பிடி.  நேர்படத் தொடுத்து என்று இயைத்து - பகைவர்க்கு எதிராக
அம்புதொடுத்து என்றலும் அமையும்.  'மலையிலக்கென' என்றதற்கு -
மலையே (எமது அம்புக்கு ஏற்ற) குறியாவது என்று எண்ணி யெனவும்
உரைக்கலாம்;  இக்கருத்து, செருக்கினாலாவது.  சிலீமுகம் - கூர்மையை
முகத்தினுடையதென்று அம்புக்குக் காரணப் பெயர்.                  (197)