பக்கம் எண் :

128பாரதம்விராட பருவம்

துணித்துமேவலர்முடியுகுசோரிதோய்தொடையுங்
கணித்தவெல்லையிற்கொண்டுமீண் டமர்க்களங்கலந்தான்.

      (இ -ள்.) (அருச்சுனன்), பிணித்த தேரினை - (அவ்வாறு உத்தரனைச்)
சேர்த்துக் கட்டிய இரதத்தை, பெற்றம்உம் பின்பட - (வேகத்திற்சிறந்த) காற்றும்
பின்னிடும்படி [காற்றினும் விரைவாக], கடாவி-செலுத்திச் சென்று,-அரும்
பெரும் பொதும்பரில் - (பிறர் அறிதற்கு) அரிய பெரிய மரப்பொந்தில்,
திணித்து சேர்த்திய - (முன்பு) கட்டி மறைத்து வைத்துள்ள, சிலைஉம்-(தனது)
வில்லையும், மேவலர் முடி துணித்து - பகைவர்களது தலைகளை அறுத்து,
உகு சோரி தோய் - (அவற்றினின்று) பெருகுகின்ற இரத்தந் தோயப்பெற்ற,
தொடைஉம் - அம்புகளையும், கணித்த எல்லையின் கொண்டு - நினைத்த
மாத்திரத்தில் எடுத்துக்கொண்டு, மீண்டு - திரும்பிவந்து, அமர்களம் கலந்தான்
- யுத்தஞ்செய்யுமிடத்தைச் சேர்ந்தான்; (எ - று.)

     'பொதும்பரிற் சேர்த்திய சிலையும் தொடையும்' என்றது -
கீழ்ப்பாண்டவர்கள் அஞ்ஞாதவாசஞ் செய்யச் செல்லும்பொழுது
விராடநகர்ப்புறத்து நன்காட்டிற் காளிகோயிலுக்கெதிரிற் பெரியதொரு
வன்னிமரத்தின் பொந்திலே தம்தம் ஆயுதங்களையும் கவசங்களையும்
பிறவற்றையும் ஒளித்துவைத்து வேறெவரும் அறியாதபடி மந்திரமோதிக்
காப்பிட்டு வந்தமையிலென்க.  பொதும்பர் - பொதும்பு என்னும்
மென்றொடர்க்குற்றியலுகரத்திற்கு அர்-போலி.  மேவலர் - விரும்பிச்
சேராதவர்.  சொரிவது - சோரி, இரத்தம்.  தொடுக்கப்படுவது, தொடையெனக்
காரணக்குறி. 'கணித்த எல்லையின்' என்பதற்கு - (முன்பு
அஜ்ஞாதவாசத்துக்குக்) குறித்தகாலத்தின் முடிவிலென்று உரைப்பாருமுளர்.
திணிதரும் என்று எடுத்து - வலியமைந்த என உரைப்பர், ஒருசாரார்.  (201)

43.-இதுவும், அடுத்தகவியும் - உத்தரனுக்கும் பிருகந்நளைக்கும்
நடந்த சம்பாஷணையைத் தெரிவிக்கும்.

எரிப்புறத்தருத்தருபடையாவெனவினவக்
கிரிப்புறப்பெருங்கானுறைகிரீடியவென்னத்
தெரிப்புறப்புகலெவ்வயிற்சேர்ந்தனனவனென்று
அரிப்புறத்தடங்கண்ணியைக்கேட்டனனவனும்.

      (இ -ள்.) 'எரி புறம் - நெருப்பைத் தன்னிடத்தே யுடைய, தரு -
வன்னிமரம், தரு - தந்த, படை - ஆயுதங்கள், யா-எவருடையவை?' என
வினவ -என்று (உத்தரன்) கேட்க,- 'கிரி - மலைகளிலும், புறம் - அவற்றின்
புறத்திலுள்ள, பெருங் கான் - பெரிய காடுகளிலும், உறை - வாசஞ்செய்த,
கிரீடிய - அருச்சுனனுடையவை', என்ன - என்று (உருக்கரந்த அருச்சுனன்)
சொல்ல,- 'அவன் எ வயின் சேர்ந்தனன் - அவ்வருச்சுனன் எந்த இடத்திற்
சென்று சேர்ந்தான்? தெரிப்பு உற புகல் - தெரியும்படி சொல்,' என்று-, அவன்
உம் - அவ்வுத்தரனும், அரி புறம் தட கண்ணியை - (சிவந்த) ரேகைகளைத்
தம்மிடத்தேயுடைய பெரிய கண்களையுடையளான பேடியை, கேட்டனன் -
வினவினான்; (எ - று.)