பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 13

வல்லன்என்று முதனூலிற் பேர் கூறப்பட்டுள்ளது.  வீமன்வணங்கியது
தருமனையேயென்பார்  'தம்முன் மலரடி முன்னிவணங்கி' என்றார்.     (15)

16.-அவ்வீமனையும் விராடராசன் வெகுமதிசெய்து
தன்னிடத்துக்கொள்ளல்.

என்றபோதவனைவிராடனுமகிழ்வுற்றிருகையுஞ்சென்னிமேலிருத்திப்
பொன்றிகழ்மணிப்பூண்மென்றுகில்பலவும்புரவிபோதகங்களும்வழங்கி
இன்றுதொட்டெமக்குமெய்ப்பெருஞ்சுற்றத்தொருவனீயென்றடு
                                            தொழிற்கு
நின்றவரெவர்க்குந்தலைவனாமுரிமைநிலைபெறவழங்கினன்மாதோ.

     (இ -ள்.) என்ற போது - என்று (வீமசேனன்) சொன்னபோது, அவனை
- அந்தப்பலாயனனென்றவீமனை, விராடன்உம் - விராடராசனும், மகிழ்வுஉற்று
- மகிழ்ச்சிபொருந்தி, இரு கைஉம் - (தன்) இரண்டுகைகளையும்,
சென்னிமேல்இருத்தி - (அந்தவீமசேனனுடைய) சிரசின்மேலிருக்க வைத்து.-
பொன் திகழ் மணி  பூண் (பலஉம்) - பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
விளங்குகின்ற ஆபரணங்கள் பலவற்றையும், மெல் துகில் பலஉம் -
பலவகைப்பட்ட மெல்லிய ஆடைகளையும், புரவி போதகங்கள்உம் -
குதிரைகளையும் யானைக்கன்றுகளையும், வழங்கி - கொடுத்து,- 'இனறு
தொட்டு - இன்றுமுதல், எமக்கு-, நீ-, மெய் பெருஞ் சுற்றத்து ஒருவன் -
உண்மையான பெருஞ் சுற்றத்தாரி லொருத்தனாவாய்', என்று - என்று
(முகமன்) கூறி,-அடு தொழிற்கு நின்றவர் எவர்க்குஉம் - (தன்னிடத்துச்)
சமையல்தொழிலில் அமர்ந்து நிற்பவரெல்லார்க்கும், தலைவன் ஆம் -
தலைவனாகின்ற, உரிமை - உத்தியோக முறைமையையும், நிலைபெற -
நிலையாக, வழங்கினன் - (அந்தப் பலாயனனுக்குக்) கொடுத்தான்; (எ - று.)

      பலவும்என்பது பூண்என்பதனோடும் கூட்டப்பட்டது.  இருகையும்
சென்னிமேலிருத்தியது - நீ என்னிடத்து ஒதுங்கிவாழலா மென்பதைக்
குறிப்பிக்கும்.  இனி, தன்தலையின்மேல் தன்இருகைகளையும் வைத்து விராடன்
வீமனை அஞ்சலிசெய்தா னென்றல், இந்நிலையில் ஏலாதென்க.  போதகம் -
யானைக்கன்று: வடசொல்.  ஒருவன் நீ - முன்னிலையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி.  மாதோ - ஈற்றசை.  ஐம்பெருஞ்சுற்றத்து என்ற பாடத்துக்கு,
ஐம்பெருஞ்சுற்றங்களாவார் - மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் தூதர்
சாரணர்என்ற இவர்.                                            (16)

17.-உருப்பசி தந்த சாபத்தால் அருச்சுனன் ஒருவருடம்தாங்கவேண்டிய பேடிவடிவத்தைக் கொள்ளுதல்.

நீடியசிலைக்கைத்தேவர்கோன்மதலை நிருத்தநல்லரங்கினின்முன்
                                              னாள்,
வாடியமருங்குல்பணைத்தபூண்கொங்கை வாட்டடங்கண்கள்
                                      வார்குழைமேல்,
ஓடியவதனத்துருப்பசிபணியா லுறுவதற்கோரியாண்டமைந்த,
பேடியின்வடிவந்தரித்தன னாண்மைக்கிமையவரெவரினும்
                                         பெரியோன்.