பக்கம் எண் :

148பாரதம்விராட பருவம்

முள்ள(அருச்சுனன் தேரிற் பூட்டிய) நான்கு குதிரைகளும், - உச்சம் வானிடை
- உயர்ந்த ஆகாயமார்க்கத்தில், பகலவன் ஊர்ந்த - சூரியன் ஏறிச்செல்கின்ற,
தேர் - தேரில், பூண்ட - பூட்டப்பட்டுள்ள, பச்சை வாசியின் - பசுமை
நிறமுடைய குதிரைபோல, ஓடின-;

     அருச்சுனனைப் பகையிருளொழிக்கும் ஆதித்த னென்பார், அவனது
தேர்க்குச் சூரியன்தேரையும், குதிரைகட்குச் சூரியன் குதிரையையும்,
பாகனுக்குச் சூரியசாரதியையும் உவமைகூறினார்;  இத்தன்மையை முன்னும்
பின்னுங் காணலாம்.  உவமையணி.  'பச்சைவாசியினோடின சுவேதவெம்
பரிமா'-முரண்தொடை. ராஜகுலத்தவனாதலால், அருச்சுனனை 'மன்னவன்'
என்றது.  உளவுகோல் - குதிரைகளை யடித்தோட்டுஞ் சவுக்கு.  பகலவன் -
தனது சேர்க்கையாற் பகலைச்செய்பவன்.  இந்த நான்கு வெள்ளைக்
குதிரைகள், காண்டவதகனகாலத்து அக்கினிதேவனால் அருச்சுனனுக்கு
அளிக்கப்பட்டவை; இவற்றை யுடைமையால், அருச்சுனனுக்குச்
சுவேதவாகனனென்றுஒரு பெயர்.  குதிரைக்கு வெம்மை - மிக்க விரைவு.
பரி மா - பரியாகிய மா [விலங்கு] என இருபெயரொட்டு.           (224)

66.-துரியோதனனதுதேர்க்கொடியை அருச்சுனனது
தேர்க்கொடி சென்று நெருங்குதல்.

உரவினால்வடமேருவைக்கொடுமுடியொடித்து
விரவியென்பெருந்தாதைநின்றாதையைவென்றான்
பரிவினின்னையான்வெல்லனென் றவனிபன்பதாகை
அரவைமற்றிவன்பதாகையிலனுமன்வந்தடுத்தான்.

      (இ -ள்.) 'என் பெருந் தாதை - எனது பெருமைபொருந்திய
தந்தையானவாயுபகவான், விரவி - பகைமைகொண்டு, உரவினால் - (தன்)
வலிமையால்,வடமேருவை - வடக்கிலுள்ள மகாமேருமலையை, கொடுமுடி
ஒடித்து -மூன்றுசிகரங்களை முறித்துத் தள்ளி, நின் தாதையை - உனது
தந்தையானஆதிசேஷனை, வென்றான் - (முன்பு) ஜயித்தான்; (அவ்வாறே),
யான் -யானும், நின்னை - உன்னை, பரிவின் - துன்பப்படும்படி, வெல்வன் -
ஜயிப்பேன்,' என்று - என்றுகருதி, அவனிபன் பதாகை அரவை -
துரியோதனராசனது கொடியிலுள்ள பாம்பை, இவன் பதாகையில் அனுமன் -
அருச்சுனனது கொடியிலுள்ள அனுமான், வந்து அடுத்தான் - வந்து
நெருங்கினான்; (எ - று.) - மற்று - அசை.

     அருச்சுனன் தேர்க்கொடியிலுள்ள அனுமன், துரியோதனனது
தேர்க்கொடியிலெழுதப்பட்டுள்ள பாம்பை நோக்கி 'என் தந்தை உன்
தலைவனை முன்னமே வென்றுள்ளான்: அவ்வாறே இப்பொழுது யான்உன்னை
வெல்வேன்' என்று கறுக்கொண்டு வீரவாதங்கூறிப் போர்க்கு
நெருங்குகின்றவாறு போல நெருங்கின னென்றார்; தற்குறிப்பேற்றவணி.
அருச்சுனன் தேர் துரியோதனனதுதேரை வந்து நெருங்கும்பொழுது
அவ்வனுமக்கொடி இவன் அரவக்கொடியை