னாலும்வெகுண்டு கூறினாலும் அந்தந்தப் பயன்களைத் தந்தேவிடுகின்ற நிறைமொழிகளையுடைமையாற்) பழுதுபடுதல் [தவறிப்போதல்] இல்லாத நாவுடையானென்றுமாம். 'முழுதுணர்' என்னும் அடைமொழியை முந்தைக்குங் கூட்டலாம்; அவரும் திரிகாலஞானியாதலால். பழமையுணர்த்துகின்ற 'முந்தை' என்ற பண்புப்பெயர், இங்குப் பாட்டனுக்கு ஆகுபெயராம். முன் தந்தை யென்பது முந்தையென மருவிய தென்பர் ஒருசாரார்: தந்தைக்கு முற்பட்டவனென்பது கருத்து: பீஷ்மன் அருச்சுனனுக்குப் பெரியபாட்டனாவன். பற்குனன் - பல்குந னென்ற வடசொல்லின் விகாரம்: பங்குனி மாதத்தில் உத்தரபல்குநி [உத்தரம்] என்னும் நக்ஷத்திரத்திற் பிறந்ததனால், பல்குனனென்று அருச்சுனனுக்குப் பெயர்: இப்பெயர் தமிழிற் சிறுபான்மை பங்குனனெனத் திரிந்தும் வழங்கும். தொழுது தொடையேவுதல் - இரண்டு பாதங்களிலும் இரண்டு அம்புகளைச் செலுத்துவது. 'தொழா நின்று' என்னும் நிகழ்காலவினையெச்சம், இங்கு 'தொழுது' எனத்திரிந்து நின்றது; அம்புகளையேவி அதனால் தன்வணக்கத்தை யுணர்த்தின னென்பது கருத்து. இருவரும் பெருமுதுகுரவ ராதலால், அவர்களைத் தொழுது தொடையேவினான். (244) 86.-துரோணர் அருச்சுனனையெதிர்த்தல். தாளிணை யிறைஞ்சியதனஞ்ச யன்றொடும் வாளிகண் டுளமிகமகிழ்ச்சி கூரவும் மீளிமை யுடையவவ்வீரன் மீதெழும் தூளிசெய் தேரினைத்துரோண னுந்தினான். |
(இ -ள்.) (அப்பொழுது), துரோணன்-, -தாள் இணை இறைஞ்சிய - (தனது) உபயபாதங்களை வணங்குதற்பொருட்டு, தனஞ்சயன் தொடும் - (தனது இரண்டுபாதங்களின்மேலும்) அருச்சுனன் தொடுத்த, வாளி - அம்புகளிரண்டையும், கண்டு - (தான்) பார்த்தலால், உளம் மிக மகிழ்ச்சி கூரஉம் - (தன்) மனம் மிகுதியாய் மகிழ்ச்சியடையவும்,- மீளிமை உடைய அ வீரன்மீது - வெல்லுந்திறமையையுடைய அந்தமகாவீரனாகிய அருச்சுனன்மேல், எழும் தூளி செய் தேரினை - மேற்கிளம்பும் புழுதிகளை யுண்டாக்குகின்ற (தனது) இரதத்தை, உந்தினான் - செலுத்தினான்; (எ - று.) கண்டுஉளம்மகிழ்தல்-தனது அந்தரங்கசிஷ்யனான அருச்சுனனது திறமையையும் பணிவையும் நோக்கி. இங்ஙனம் மனமகிழவும் அவனுடன் பொருதற்குத் தேர்செலுத்தியது, துரியோதனனுக்காகச் சோற்றுக்கடன் கழிக்கவேண்டுதலால். (245) வேறு. 87.-அருச்சுனன்துரோணனைநோக்கிச் சிலகூறத்தொடங்குதல். உந்துதேர் முனியை யந்தவுதிட்டிர னிளவ னோக்கிச் சிந்தையி லன்பு கூரச்சேவடி பணிந்து போற்றி |
|