'செஞ்சோற்றுக் கடன்கழித்திடுதல்வேண்டும்' என்றது, துரியோதனன் எங்களுக்குச் செவ்வையாய் அளித்துவருகின்ற சோற்றுக்குப் பிரதியுபகாரமாக அவனுக்கு உதவியாய் உங்களுக்குமாறாக நாங்கள் போர் செய்யவேண்டுவது கடமை யென்றபடி. பகை - பகைவர்க்குப் பண்பாகுபெயர். 'வேண்டும்' என்பது, ஒருவகைவியங்கோள்; இங்கு, இன்றியமையாதென்னும் பொருளது.(249) 91.-துரோணனும் அருச்சுனனும்தம்மிற் பொருதல். குருவுமக்குருவைத்தப்பாக்குருகுலக்கோவுந்தங்கள் அருவரைத்தோளினாணியறைதரப்பிறைவில்வாங்கி கருவுயிர்த்தெழுந்தகாலமழைமுகில்கால்கொண்டென்ன ஒருவருக்கொருவர்வாளியோரொருகோடியெய்தார். |
(இ -ள்.) (பின்பு), - குருஉம் - துரோணாசாரியனும், அ குருவை தப்பா - அந்த ஆசிரியனதுவார்த்தையைத் தவறாத, குரு குலம் கோஉம் - குருவென்னுஞ் சந்திரகுலத்தரசனது வமிசத்துத் தோன்றிய சிறந்த அரசனாகிய அருச்சுனனும்,- வில் பிறை வாங்கி - (தம் தமது) வில்லைப் பிறைச்சந்திரனைப்போல வளைத்து,- தங்கள் அருவரை தோளில் நாணி அறை தர - தம் தமது அழித்தற்கரிய மலைகள் போலுந் தோள்களிலே வில்லின் நாண் படும்படி [தோளளவும் நாணியையிழுத்து],- கரு உயிர்த்து எழுந்த காலம் மழை முகில் கால்கொண்டு என்ன - தன்னுட் கொண்ட நீரைப் பெய்துகொண்டு வானத்திலெழுந்த கார்காலத்து நீர்கொண்ட (இரண்டு) காளமேகங்கள் மழைக்கால்களைக் கொண்டாற்போல, வாளி ஓர் ஒரு கோடி ஒருவருக்கு ஒருவர் எய்தார் - ஒவ்வொரு கோடி அம்புகளைத் தம்மில் ஒருவரைக் குறித்து ஒருவர் தொடுத்தார்கள்; (எ - று.) துரோணனும் அருச்சுனனும் வில்லைவளைத்து நாணியை யிழுத்து மழைபெய்தாற்போலக் கோடிகோடியம்புகளை ஒருவரைக் குறித்து ஒருவர் பிரயோகித்தன ரென்பதாம்; உவமையணி. 'போர்புரியேன்' என்று சொன்ன அருச்சுனன் பிறகு துரோணன் 'வில்லை வளைத்திடுக' என்ற வளவிலே அவ்வாசிரியனது கட்டளைக்கு இணங்கிப் போர்தொடங்கியமைபற்றி, 'குருவைத்தப்பாக் குருகுலக்கோ' என்றார். 'குருவைத்தப்பாக்குருகுலக்கோ' என்ற தொடரில் 'குரு' என்ற ஒரு சொல்லே வெவ்வேறு பொருளில்வந்தது, சொற்பின்வருநிலையணியாம். (250) 92.- இருவரும் சிறிதுபொழுதுசமமாகப்பொருதல். அதிரதர்தம்மையெண்ணிலணிவிரன்முடக்கவொட்டா முதிர்சிலைமுனியும்வீரமுனிவிலாமுகனும்விட்ட கதிர்முனைப்பவனவேகக்கடுங்கொடும்பகழியாவும் எதிரெதிர்கோத்தவல்லாற்பட்டிலவிருவர்மேலும். |
(இ -ள்.) அதிரதர்தம்மை எண்ணில் - அதிரதர்களை (அறிவுடையார்) எண்ணுமிடத்து, அணி விரல் முடக்க ஒட்டா - (தன்னை எண்ணி |