பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 175

100.-அருச்சுனன் நான்குதிசையிலும் அஸ்திரங்களைப்
பிரயோகித்தல்.

குடதிசைமகவான்வாளிகுணதிசைவருணன்வாளி
வடதிசைமறலிவாளிதென்றிசைமதியின்வாளி
அடலுறவிமைப்பினேவியவரவர்மார்புந்தோளும்
படருறப்படைகணீறுபடப்படப்பரப்பினானே.

      (இ -ள்.) குட திசை - மேற்குத்திக்கில், மகவான் வாளி - இந்திரனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [ஐந்திராஸ்திரமும்], குண திசை - கிழக்குத்திக்கில்,
வருணன் வாளி - வருணனைத் தெய்வமாகவுடைய அம்பும்
[வாருணாஸ்திரமும்], வடதிசை - வடக்குத்திக்கில், மறலி வாளி - யமனைத்
தெய்வமாகவுடைய அம்பும் [யமாஸ்திரமும்], தென் திசை - தெற்குத்திக்கில்,
மதியின் வாளி - குபேரனைத் தெய்வமாகவுடைய அம்பும் [குபேராஸ்திரமும்],
(ஆக இவ்வாறு), அடல் உற - மாறுபட, இமைப்பின் ஏவி -
ஒருநொடிப்பொழுதிற் பிரயோகித்து, அவர் அவர் மார்புஉம் தோள்உம் படர்
உற - அந்தந்த வீரரது மார்பும் தோள்களும் நோவடையும்படியாகவும்,
படைகள் நீறு படபட - (அவரவரது) ஆயுதங்களெல்லாம் பொடிப்பொடியாய்
அழிந்துபோம்படியாகவும், பரப்பினான் - பரப்பச்செய்தான்; (எ - று.)

   
மகவான்வாளி - இந்திரனுடைய அஸ்திரம்; பிறவும் இங்ஙனமே கொள்க.
இந்திரன்முதலிய நால்வரும் முறையே கிழக்குமுதலிய நான்குதிசைகளுக்குங்
காவலராவர்.  அந்தந்தத்திக்குப்பாலகரின் அம்பைஅவரவர்நேரிற்
செல்லக்கூடிய எதிர்த்திசையில் தொடுத்தனனென்பது விளங்க,
'அடலுற ஏவி' எனப்பட்டது.  குடக்கு + திசை = குடதிசை.  நூறு
அசுவமேதயாகங்களைச் செய்தவன் இந்திரபதவி பெறுவனாதல் பற்றி, 'மகவாந்'
என்று இந்திரனுக்கு ஒருபெயர்; வடசொல்: மகம் - யாகம்: மறல் - கொடுமை,
கொலை, அதனைச் செய்பவன் மறலி என யமனுக்குக் காரணக்குறி:  ஸோமன்,
இந்து என்ற வடமொழிகள், சந்திரனுக்கேயன்றிக் குபேரனுக்கும்
பரியாயநாமமாக வழங்குதல்பற்றி குபேரனை 'மதி' என்றார்; என்றது,
லக்ஷிதலக்ஷணையென்க. [மதி = ஸோமன், இந்து: ஸோமன்=இந்து, குபேரன்.]
ஸோமனென்பது குபேரனுக்கு வழங்குதலைப் பலவிடத்துங் காணலாம். (259)

101.-அருச்சுனன் மோகநாஸ்திரந்தொடுத்துப்
பகைவர்சேனையை மயங்கிவிழச் செய்தல்.

கோகனநாகவேகக்கொடியவன்சேனையாவும்
மோகனக்கணையொன்றேவிமுடியடிபடிக்கண்வீழ்த்தான்
மாகனற்கடவுடந்தமணிப்பொலந்தடந்தேர்வெள்ளை
வாகனக்குரிசில்வின்மைவல்லபமிருந்தவாறே.

      (இ -ள்.) (பின்னும் அருச்சுனன்), மோகனம் கணை ஒன்று ஏவி -
மயக்கத்தையுண்டாக்கும் அஸ்திரமாகிய மோகனாஸ்திரமொன்றைப்