பக்கம் எண் :

196பாரதம்விராட பருவம்

யவனுக்கு நிகழ்பெற்றியுரைசெய்தான்,"  "உரைத்தபொழுதிப்பொழுதிவ்வூ
ரெரிகொளுத்தித், தரைத்தலைவனைத் தலைதடிந்திடுவலென்னா,
விரைத்தடவரைப் புயன்வெகுண்டுவிலெடுத்தான், இரைத்துவரு கான்மகனு
மெரிவிழிசிவந்தான்," "அனலுமுதுகானகமகன்று நெடுநாள்நம், நினைவுவழுவாம
லிவனீழலிலிருந்தோம், சினமிகுதலிற்றவறு செய்தன னெனப்போய், முனிதல்
பழுதாகுமென முன்னவன்மொழிந்தான்" என வருஞ் செய்யுள்களிற் கூறும்
விஷயமும் நோக்கத்தக்கது.)

     கிளை - மரத்தைக் கிளைபோல ஒருவனைத் தழுவிநிற்கும்
உறவினத்துக்கு உவமவாகுபெயர்.  அரசனுக்கு ஒளி - 'உறங்குமாயினு
மன்னவன்றன்னொளி, கறங்குதெண்டிரைவையகங் காக்குமால்" என்றபடி
உறங்காநிற்கவும் தான் உலகங்காக்கின்ற அவனது தெய்வத்தன்மையும், தான்
உயிர்வாழுங்காலத்து மிக்குத்தோன்றுதலுடைமையும், புகழுமாம்.  மல்க மல்க -
அடுக்கு, இடைவிடாமை குறிப்பது.                               (286)

128.-விராடன்கழிவிரக்கங்கொள்ளுதல்.

கண்ணினீர்மல்கவண்ணக் காரிகைகலையாலந்த
வண்ணமாமுனிவன்சோரி மாற்றியகாலையையுற்று
எண்ணமுஞ்செயலும்வேறா யென்செய்தோமென்செய்தோமென்று
அண்ணலுந்தன்னைநொந்தாங் கருஞ்சினம்பாவியென்றான்.

      (இ -ள்.) அந்த வண்ணம் - அவ்வாறு, வண்ணம் காரிகை - வண்ண
மகள், கண்ணின் நீர் மல்க - (தன்) கண்களினின்று நீர்பெருக, கலையால் -
(தனது) ஆடையினால், மா முனிவன் சோரி - சிறந்த அந்தக்
கங்கமுனிவனுடைய இரத்தத்தை, மாற்றிய காலை - துடைத்தபொழுது,-
அண்ணல்உம் - பெருமையிற்சிறந்தவனான விராடராசனும், ஐயுற்று -
சந்தேகமடைந்து, எண்ணம்உம் செயல்உம் வேறு ஆய் - நினைப்பும்
தொழிலும் வேறுபட்டு, 'என் செய்தோம் என் செய்தோம்-
(ஆலோசனையில்லாமல்) என்ன தவறான காரியஞ் செய்துவிட்டோம்!  என்ன
தவறானகாரியஞ்செய்து விட்டோம்!!' என்று - என்று பலதரம் எண்ணி, தன்னை
நொந்து - தன்னைத்தானே செறுத்துக்கொண்டு, ஆங்கு - அப்பொழுது,
அருஞ் சினம் பாவி என்றான் - 'அடக்குதற்கு அரிய கோபம் கெட்டது' என்று
பச்சாத்தாபப்பட்டான்; (எ - று.)

      கலை -சேலை; இங்கு, முன்தானை.  முனிவனது நெற்றியிற் பொசியும்
இரத்தத்தை வண்ணமகள் துகிலால் துடைத்ததுஎன்னவென்று விராடன்
சங்கைகொண்டான்.  'எண்ணமுஞ் செயலும் வேறாய்' என்றது, இவ்வளவு
காலமாய்க் கங்கபட்டனிடத்து வைத்திருந்த அன்போடு கூடிய மதிப்பாகிய
நினைப்பும் இப்பொழுது கவற்றினாலெறிந்த கடுந்தொழிலும் ஒன்றோடொன்று
ஒற்றுமையுடைய தன்றாகி யென்றபடி.  பாவமென்றும்பாடமுண்டு:
'அருஞ்சினம் பாவி' என்றதை "அழுக்காறென வொருபாவி" என்றாற்போலக்
கொள்க.  பண்பிற்குப் பண்பியில்லையாயினும் தன்னை