பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 197

யுடையவனைஇம்மைமறுமை யிரண்டிலும் கெடுக்கின்ற கொடுமைபற்றி,
சினத்தை 'பாவி' என்றனரென்க; கொடியவனை 'பாவி' என்னும் வழக்கு
இருத்தலால்.                                               (287)

129.-மாலைப்பொழுதில்உத்தரன் நகர்க்கு மீளுதல்.

ஆயிடையத்தக்குன்றுக்காதபனணியனாகச்
சேயிடையெதிர்கொள்கொற்றச் சேனைமன்னவர்கள்சூழ
வீயிடைவரிவண்டார்க்கும்வியன்பெருங்காவுநீங்கிப்
போயிடைநெருங்கிவேந்தன்புதல்வனப்புரத்தைச்சேர்ந்தான்.

      (இ -ள்.) அ இடை - அப்பொழுது, ஆதபன் - சூரியன், அத்தம்
குன்றுக்கு அணியன் ஆக - அஸ்தமநகிரிக்குச் சமீபத்திற்சென்றவனாக
[சாயங்கால மாகுஞ் சமயத்தில்],- வேந்தன் புதல்வன் - விராடராசனுடைய
குமாரன் [உத்தரன்],- சேய் இடை எதிர்கொள் கொற்றம் சேனை மன்னவர்கள்
சூழ - வெகுதூரம்வந்து தன்னை யெதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்ற
வெற்றியையுடைய சேனைத்தலைவர்கள் (தன்னைச்) சூழ்ந்து வர,-வீயிடை வரி
வண்டு ஆர்க்கும் - மலர்களில் உடற்கோடுகளையுடைய வண்டுகள் மொய்த்து
ஆரவாரிக்கப்பெற்ற, வியல் பெருங் காவு - அகன்ற பெரிய சோலையினின்று,
நீங்கி போய் - புறப்பட்டுச் சென்று, இடை நெருங்கி - நடுவிடத்தைக் கடந்து
நெருங்கி, அ புரத்தை சேர்ந்தான்-அந்தப் பட்டணத்தை யடைந்தான்; (எ - று.)

     அத்தக்குன்று, மேற்றிசையில் மேல்கடலைச் சாரவுள்ள தெனப்படும்.
தென்புறத்துப் பகை வென்று நிரைமீட்டுவந்தசேனையென்பதுபற்றி,
'கொற்றச்சேனை' என்றார். வரி - இசைப்பாட்டுமாம். அப்புரம் - விராடபுரம்.
                                                       (288)

130.-உத்தரன் வீதியில்உலாப்போதல்.

பரந்துவெம்படைகண்மின்னப்பல்லியம்பணிலமார்ப்பச்
சுரந்துமும்மதமும்பாயுந்துதிக்கைவாரணங்கள்சூழப்
புரந்தரனகரிற்காளப்புயல்வருமாறுபோல
உரந்தருபேடிதன்றேரூரவேவீதியுற்றான்.

      (இ -ள்.) (அங்ஙனஞ்சேர்ந்த உத்தரன்), - வெம் படைகள் - கொடிய
ஆயுதங்கள், பரந்து மின்ன - பரவிப் பிரகாசிக்கவும், பல் இயம் - பலவகை
வாத்தியங்களும், பணிலம் - வெற்றிச் சங்கத்தோடு, ஆர்ப்ப -
ஆரவாரிக்கவும்,- சுரந்து மும் மதம்உம் பாயும் - ஊற்றெடுத்து [இடைவிடாமல்]
மூன்றுவகை மதங்களும் பெருகப்பெற்ற, துதிக்கை வாரணங்கள் -
துதிக்கையையுடைய யானைகள், சூழ - (தன்னைச்) சூழ்ந்துவரவும்,-புரந்தரன்
நகரில் - தேவேந்திரனது பட்டணத்தில், காளம் புயல் வரும் ஆறு போல -
கறுத்தமேகம் வருவதுபோல, உரம் தரு பேடி தன் தேர் ஊர - (தனக்கு)
வெற்றியைக்கொடுத்த பேடியாகிய பிருகந்நளை தனதுதேரைச் செலுத்த,
வீதிஉற்றான் - அந்நகரத்து வீதிகளின் வழியே சென்றான்; (எ - று.)