பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 201

இகழ்ந்தமைநுவலும்போதைக்கெல்லையின்றிவனைப்போல
அகழ்ந்தநீராடைஞாலத்தார்கொலோவமைவின்மிக்கோர்.

இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர்.

      (இ -ள்.) (அதுகண்ட உத்தரன்), 'திகழ்ந்த நின் நுதலின் -
விளங்குகின்ற உனது நெற்றியிலே, ஊறு செய்தவர் - வடுப்படுத்தியவர், யார்
கொல் -யாரோ?' என்ன - என்று (அக்கங்கபட்டனை) வினாவியவளவில்,
நிகழ்ந்தமை- நடந்தசெய்தியை, தந்தை - தந்தையான விராடன், கூற -
சொல்ல,-(கேட்டறிந்த உத்தரன்), நெஞ்சினால் - (தன்) மனத்தினால், தந்தை
தன்னை -(தன்) பிதாவான அவ்விராடனை, இகழ்ந்தமை - வெறுத்ததை,
நுவலும்போதைக்கு - சொல்லுமளவுக்கு, எல்லை இன்று - ஒரு
வரையறையில்லை,(அங்ஙனம், மிகவெறுத்தபின்பு உத்தரன்), 'இவனை போல -
இம்முனிவனைப்போல, அமைவின் மிக்கோர் - பொறுமையிற் சிறந்தவர்,
அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து - (சக்ரசக்கரவர்த்திகுமாரர்களால்)
தோண்டப்பட்ட கடலை ஆடையாகவுடைய [கடல்சூழ்ந்த] இந்நிலவுலகத்தில்,
ஆர் கொல்ஓ - வேறு யாருளரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.)

     அமைவாவது - காரணம்பற்றியாவது, பேதைமையாலாவது ஒருவன்
தமக்குக் குற்றஞ்செய்தவிடத்துத் தாமும் அவனுக்கு அதனைச்செய்யாது
பொறுத்தல்.  மிகுதியாக இகழ்ந்தது - அம்முனிவனைத் தருமபுத்திரனென்று
தானறிந்ததனாலும், "வென்றவன் பேடியே" என்று அவன் கூறியது
உண்மையேயாக அதுபற்றி விராடன் அவனைச்சினந்து கவறு கொண்டெறிந்தது
பெருந்தீங்காதலாலு மென்க.  ஐம்பெருங்குரவரிலொருவனாகிய தந்தையைச்
சொற்செயல்களால் வெறுத்தல் கூடாமையாலும், மனம் பொறாமையாலும்,
நெஞ்சினா லிகழ்ந்தான்.                                       (292)

134.-உத்தரன் தந்தையும்தானுமாய்த் தருமனை வணங்கிச்
சினந்தீர்த்தல்.

செறுப்பதுபெருமையன்றுசிறியவர்செய்ததீமை
பொறுப்பதேபெருமையென்றுபூசுரன்பாதம்போற்றி
வெறுப்பதுவிளைத்ததாதைவீழ்ந்தபின்றானும்வீழ்ந்து
மறுப்பதுபுரியாஞானிமனத்துனியகற்றினானே.

      (இ -ள்.) 'சிறியவர் செய்த தீமை - சிறியோர்செய்த தீங்கை, செறுப்பது
- வெறுத்துக் கோபிப்பது, பெருமை அன்று - பெருந்தன்மையன்று;
பொறுப்பதுஏ - (அதனைப்) பொறுத்துக்கொள்வதே, பெருமை -
பெருந்தன்மையாம்,' என்று - என்றுசொல்லி, வெறுப்பது விளைத்த தாதை
வீழ்ந்தபின் - வெறுக்கத்தக்க [தீய] காரியத்தைச் செய்த தந்தையான விராடன்
(கங்கபட்டனது பாதங்களில்) விழுந்து நமஸ்கரித்தபின்பு, தான்உம் -
(மைந்தனாகிய) தானும், பூசுரன் பாதம் - அந்தணனாகிய அக்கங்கபட்டனது
பாதங்