அடங்குகேள்வி - அடக்கமுடையவனாயிருத்தற்குக் காரணமான நூற்கேள்வி யெனினுமாம். (294) 136.-பிருகந்நளை செய்தி. ஓடியுத்தரன்றேரூரவொருமுனையாகத்தன்னை நாடியுத்தரிக்கமாட்டாநராதிபர்பதாகைத்தூசும் கோடியுத்தரியப்பட்டுங்குழமகன்றனக்குநல்கிப் பேடியுத்தரைதன்னோடும்பெற்றதாய்பின்புநின்றாள். |
(இ -ள்.) பேடி - பேடியாகிய பிருகந்நளை,- உத்தரன் - உத்தரகுமாரன்,ஓடி - (முதலிற் பகைவர்சேனையைக்கண்டு) அஞ்சியோடி, தேர் ஊர - (பின்புதன்வார்த்தையால் தெளிந்து) தேரையோட்ட, (தான் சென்றுபொருது), தன்னைநாடி - தன்னைக்கண்டமாத்திரத்திலே, ஒரு முனை ஆக - ஒரே துணிவாக,உத்தரிக்கமாட்டா - முன்நிற்கமாட்டாமற்போன, நரஅதிபர் -(துரியோதனன்முதலிய) அரசர்களது, பதாகை தூசுஉம் - கொடிச்சீலைகளையும்,கோடி உத்தரியம் பட்டுஉம் - (அவர்கள்மேலே தரித்திருந்த) அனேகம்பட்டாடைகளையும், குழமகன் தனக்கு - (உத்தரைவைத்துக்கொண்டுவிளையாடு கின்ற) பிரதிமைக்காக, நல்கி - (அலங்கரித்தற்பொருட்டுக்)கொடுத்து, உத்தரை தன்னோடுஉம் - உத்தரையுடனே, பெற்ற தாய் பின்புநின்றாள் - அவளையீன்ற தாயாகிய சுதேட்டிணையின் பின்புறத்தில்ஒதுங்கிநின்றாள்; (எ - று.)
இச்செய்யுளில் திரிபு என்னுஞ் சொல்லணி காண்க. கீழ் 102 - ஆஞ் செய்யுளில் "மணிக்கொடித்" தூசுந் தூசும், உத்தரைவண்டற் பாவைக்குடுத்துதற்கென்று கொய்தான்" என்று கூறியவர், அவற்றை அப்பிருகந்நளையாகிய அருச்சுனன் உத்தரைக்குக் கொடுத்த செய்தியை இங்குக் கூறினர். குழமகன் - மரப்பாவை; இளமகன்போன்ற வடிவமைந்ததென்று காரணப்பொருள் காணலாம். உத்தரன் தேரூர, ஓடி - (தான்) விரைந்துசென்று என்றுமாம். 'ஒருமுனையாக தன்னைநாடி - ஒரேதுணிவாகத் தன்னைக் குறித்துப் போர்க்குவந்து, உத்தரிக்கமாட்டா - (பின்பு) முன்னிற்க மாட்டாமற்போன' என்றலும் அமையும். கோடி - புதுமையுமாம். நரஅதிபர் - மனிதர்க்குத்தலைவர். உத்தரீயம் - மேலாடை; வடசொல். உத்தரியப்பட்டு - உத்தரீயமாகிய பட்டு என இருபெயரொட்டு. நாணத்தால் மகளிர்பின்னே யொதுங்கிநிற்றல், பேடியரியல்பு. (295) 137.-நிகழ்ந்த செய்திகளைஉத்தரன் ஏகாந்தத்தில் தந்தைக்குக் கூறத்தொடங்குதல். தந்தையுந்தானுமாங்குத்தனித்திருந்தடையலாரை முந்தியவமரிற்சென்றுமுனைந்துபோர்விளைத்தவாறும் வந்தவர்சாய்ந்தவாறுமணிநிரைமீட்டவாறும் சுந்தரகிரிகள்போலுந்தோளினான்றோன்றச்சொல்வான். |
|