படைத்தற்கடவுளுக்கும் படைத்தற்கடவுளான பரம்பொருளின் சேவடியைத் துதிப்போ மென்றவாறு. அனுபவித்தே தீரவேண்டியிருத்தலால், 'மிக்கவிதி' என்றது: இனி, மிக்கவிதியால் - சிறந்தவேதவிதிப்படி யென்றலும் உண்டு. செக்கமலம் = செங்கமலம்: வலித்தல். முதற்பதினைந்துகவிகள் - ஈற்றுச்சீரொன்று மாச்சீரும், மற்றை மூன்றும் பெரும்பாலும் காய்ச்சீர்களுமாகிவந்த அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (301) 2.-இரண்டுகவிகள் -மறுநாட்காலையில் தருமன் திரௌபதியும் தம்பிமாரும் அருகுசூழ்தர, நிஜவடிவத்தோடிருத்தல் கூறும். அருக்கனடிகைதொழு தனந்தரமருக்கன் உருக்கருகவேயருணவுருவழகெறிப்பத் திருக்கிளர்நலம்பெறுசெழுந்தெரிவையோடும் குருக்குலம்விளங்கவருகோமகனிருந்தான். |
(இ -ள்.) அனந்தரம் - (சூரியனுதித்த) பிறகு, குருக்குலம் விளங்க வரு கோமகன் - (தன்னால்) குருகுலம் விளக்கத்தையடையுமாறுதோன்றிய ராஜகுமாரனாகிய தருமன்,- அருக்கன் அடிகைதொழுது - சூரியனுடைய திருப்பாதங்களை வணங்கி, அருக்கன் உரு கருகஏ அருணம் உரு அழகு எறிப்ப - சூரியனுடைய செந்நிற வடிவம் (தன்வடிவுக்குமுன்னே) கருநிறமுடையதாகத்தோன்றும்படி செந்நிறவடிவம் அழகு வீசாநிற்க, திரு கிளர் நலம் பெறு செழுந்தெரிவையோடுஉம் - அழகுவிளங்குகின்ற நற்குணம் பூண்ட வளவிய பெண்ணாகிய திரௌபதியுடனே, இருந்தான்-; (எ - று.) காலைச்சந்தி யனுஷ்டித்ததை, 'அருக்கனடிகைதொழுது' என்றன ரென்னலாம். "பகலோனுதயப்பொருப்பின் மீண்டான்" என்று கீழ்வந்திருக்க, 'அனந்தரம்' என இங்கு வந்ததனால், சூரியனுதித்தபிறகு என்க. (302) 3. | காற்றின்மகனுங்கடவுளாதிதிருமகனும் மாற்றமுதிராயுண்மறைவானவர்மகாரும் ஏற்றமுறையாலடியிறைஞ்சியிசையோடும் தோற்றமுறுமாறருகுசூழ்தரவிருந்தார். |
(இ -ள்.) காற்றின் மகன்உம் - வாயுபுத்திரனான வீமசேனனும், கடவுள் ஆதி திருமகன்உம் - தேவர்கட்குத்தலைவனான இந்திரனுடைய குமாரனான அருச்சுனனும், மாற்றம் முதிர் - புகழ்ச்சியுரை மிக்க, ஆயுள் மறை - வைத்தியசாஸ்திரத்திலே வல்ல, வானவர் - அசுவினீதேவர்களின், மகார்உம் - மக்களான நகுலசகதேவர்களும், ஏற்ற முறையால்-(தாம்தாம்) இருக்கவேண்டிய முறைப்படியே, அடி இறைஞ்சி-(அந்தத் தருமனுடைய) பாதங்களை வணங்கிக்கொண்டு, இசையோடுஉம் தோற்றம் உறும் ஆறு - கீர்த்தியுடனே விளங்குதல் |