பக்கம் எண் :

212பாரதம்விராட பருவம்

     கான்மகன் விழி சிவந்தான் - சினைவினை முதலொடுஞ் செறிந்தது:
[நன்-பொது. 52.] விரை = விரைந்து:  வினைப்பகுதி எச்சப்பொருள் தந்தது:
"வரிப்புனைபந்து" என்ற இடத்துப்போல.                         (305)

6.-இரண்டுகவிகள்-ஒருதொடர்:தருமன் சினந்த வீமார்ச்சுனரின்
        வெகுளியை நியாயவுரையால் தணித்தலைக் கூறும்.

ஒன்றுதவிசெய்யினுமவ்வுதவிமறவாமற்
பின்றையவர்செய்பிழைபொறுத்திடுவர்பெரியோர்
நன்றிபலவாகவொருநவைபுரிவரேனும்
கன்றிடுவதன்றிமுதுகயவர்நினையாரே.

      (இ -ள்) ஒன்று உதவி செய்யின்உம் - (ஒருத்தர்) ஓருதவி செய்தா
ரேயாயினும், அ உதவி - அந்தஉபகாரத்தை, மறவாமல் - மறந்திடாமல்,
பின்றை - பிறகு, அவர் - அந்தஉபகாரஞ்செய்தவர், செய்-செய்த, பிழை-
பலகுற்றத்தை, பெரியோர் -, பொறுத்திடுவர்-: முது கயவர் - பழமையான
கீழ்மக்கள், நன்றி - (ஒருவர்செய்த) உபகாரம், பல ஆக - மிகப்பலவாயிருக்க,
(அந்த உபகாரஞ் செய்தவர்), ஒரு நவை புரிவர் ஏன்உம் - ஒருகுற்றஞ்
செய்வாரேயானாலும் (அன்னார்செய்த மிகப்பல நன்மைகளையும் மறந்து
அவர்செய்த ஒரு தீமைக்காக), கன்றிடுவது அன்றி - (அவர்மீது) கோபிப்பதே
யன்றி, நினையார்-(அவர்செய்த நன்மையை) எண்ணிச் சாந்தமாக இருக்க
மாட்டார்; (எ - று.)

     நீங்கள் கயவர்தன்மையை மேற்கொள்ளாமல் பெரியோர் தன்மையை
மேற்கொண்டு விராடன்செய்த பல நன்மைகளையெண்ணி என்நெற்றியில்
வடுச்செய்த இந்தஒருதீமையை மறக்கவேணுமென்றபடி: இந்தச்செய்யுளில்
பொதுவாகக் கூறி 'நீங்கள் சினம் மாறுதலே செய்யத்தக்கது' என்ற சிறப்புப்
பொருளைப் பெறவைத்தது-பிறிதுமொழிதலணியின்பாற்படும்.விராடன்
செய்தநன்மை, மேற்செய்யுளிற் பெறப்படும்.                        (306)

7. அனலுமுதுகானகமகன்றுநெடுநாணம்
நினைவுவழுவாமலிவனீழலிலிருந்தோம்
சினமிகுதலிற்றவறுசெய்தனனெனப்போய்
முனிதல்பழுதாகுமெனமுன்னவன்மொழிந்தான்.

      (இ -ள்.) அனலும் - பற்றியெரியுந்தன்மையுள்ள, முது கானகம் -
பழமையாகிய காட்டை, அகன்று - விட்டுநீங்கி, நெடு நாள் -
(ஒருவருஷத்திற்குச்செல்லவேண்டிய) பல நாள்கள், நம் நினைவு வழுவாமல்-
நம் எண்ணம் மாறுபடாமல் [நம்விருப்பின்படி], இவன் நீழலில் இருந்தோம் -
இந்தவிராடராசனுடைய குடைநிழலில் தங்கியிருந்தோம்; (அப்படிப்
பலநன்மைகளையடைந்த நாம்), சினம் மிகுதலில் தவறு செய்தனன் என போய்
முனிதல் - கோபம்முதிர்ந்ததனால் (என் நெற்றியில் வடுவையுண்டாக்குதலாகிய)
ஒரு தவற்றைச் செய்தான் என்று (அவன்மீது) போய்க் கோபச்செயலைக்
காட்டுதல்,