தவர்,அராவின் முடிமேல் உலகில் - ஆதிசேஷனுடைய சிரசிலே தங்கியிருக்கின்ற இந்தஉலகத்தில், ஆர்கொல் உளர் - யாவரிருக்கின்றனர்? என்றான் -; (எ - று.) விராடன் தன்பாதங்களில் வீழவே, அதற்குஎதிராகத் தருமன் எழுந்து அவ்விராடனை மார்புறத் தழுவினான். (309) 10.-தன்னிடத்துவாழ்ந்தபோது நேர்ந்திருக்குங் குறையைப் பொறுக்குமாறு விராடன் பாண்டவரை வேண்டுதல். அறைமுரசுயர்த்தவனை யவனுநனியையா பொறையுடையவர்க்கலதுபுகழ்புனைதலுண்டோ இறையமுதநற்குணமிலாதவரிடத்தில் குறைதிருவுளத்தினிடைகொண்டருளலென்றான். |
(இ -ள்.) அறை - (குணில்கொண்டு) அடிக்கப்படுகின்ற, முரசு - முரசு வாத்தியத்தை, உயர்த்தவனை - உயரவெடுத்த கொடியிலே கொண்டவனாகிய தருமபுத்திரனைநோக்கி, அவன்உம் - அந்த விராடராசனும், 'ஐயா-! பொறை - பொறுமையை, நனி உடையவர்க்கு அலது - மிகுதியாகக் கொண்டிருப்பவருக்கு அல்லாமல், (மற்றையோர்க்கு), புகழ் புனைதல் - புகழை யணிவதென்பது, உண்டு ஓ - உண்டாகுமோ? இறை - சிறிதும், அமுதம் நல் குணம் இலாதவரிடத்தில் - அமுதம்போன்ற நல்லகுணமில்லாதவரிடத்திலேநேர்ந்த, குறை - குறையை, திருஉளத்தினிடை - (உனது) திருமனத்திலே, கொண்டருளல் - கொண்டருளவேண்டா,' என்றான் - என்று வேண்டிக்கொண்டான்; (எ - று.) "ஒறுத்தார்க்கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப், பொன்றுந்துணையும்புகழ்" என்றார், நாயனாரும். என்னிடத்துக்குறையைப் பொறுக்கவேண்டும்என்று நேரேகூறுதற்குக்கூசி, விராடன், தன்னைப்படர்க்கையாகவைத்துப்பேசுகின்றான்: இக்கருத்துப்பற்றியதே இது என்பது, மேற்கவியில் தருமன்கூறுவதால் விளங்கும். மூன்றாமடியில், அறிவு முதனற்குணமடாதவரிடத்தில்என்றும் பாடம். (310) 11.-தருமன் விராடநகரத்தில்இனிதுறைந்தமை கூறல். இந்நகரிலெய்தியபினெத்துயருமெய்தாது எந்நகரியென்னநெடுநாளினிதிருந்தேம் செந்நெல்வயலூடுமுதுசேலுகளுநாடா நின்னிலுமுயர்ந்ததமர்நீயறியவுண்டோ. |
மூன்று கவிகள் - ஒருதொடர் (இ -ள்.) செந்நெல் வயலூடு - செந்நெல்விளையும் வயலில், (நீர்வளத்தால்), முது சேல் உகளும் - பழமையான சேல்மீன்கள் தாவித் திரியப்பெற்ற, நாடா - மச்சநாட்டை யுடையோனே! இ நகரில் - இந்த நகரத்திலே, எய்திய பின் - வந்துசேர்ந்தபின்பு, எ |