பக்கம் எண் :

218பாரதம்விராட பருவம்

னென்க. மூன்றாமடியில், அளிநின்ற நெஞ்சிற் குருமைந்தரறுவரோடும் என்றும்
பாடம்.                                                     (317)
 

18.-தருமபுத்திரன்முதலியோரைக்கண்டு மகிழ்ந்து ஸ்ரீக்ருஷ்ணன்  
         அவரோடும் எண்ணிப்பல பேசுதல்.

கண்டான்மகிழ்ந்தானறன்மைந்தனைக்கைதழீஇயும்
கொண்டானவன்றனிளையோர்கைகுவித்துவீழ்ந்தார்
எண்டானவரோடிசைந்தெண்ணிப்புவனமேழும்
உண்டானுரைத்தானுரைத்தக்கவுரைகளெல்லாம்.

      (இ -ள்.) (வந்து சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன்),- அறன் மைந்தனை கண்டான்
மகிழ்ந்தான் - (வனவாச அஜ்ஞாதவாசங்களைச்செய்து கழித்து வெளிப்பட்ட)
தருமபுத்திரனைக் கண்டு மகிழ்ந்தான்: கை தழீஇஉம் கொண்டான் - (தன்)
கைகளால் தழுவியும் அணைத்தான்:  அவன்தன் இளையோர் - அந்தத்
தருமனுடைய தம்பிமார், கைகுவித்து வீழ்ந்தார்-(ஸ்ரீக்ருஷ்ணனைக்) கைகூப்பி
வணங்கித்தொழுதார்கள்: அவரோடு - அந்தப்பாண்டவரோடு,-புவனம் ஏழ்உம்
உண்டான் - ஏழுலோகங்களையும் உண்டவனான திருமாலினவதாரமான
ஸ்ரீக்ருஷ்ணன்,- எண் இசைந்து எண்ணி - ஆலோசனைகளை
மனமொத்திருந்து ஆலோசித்து, உரைத்தக்க உரைகள் எல்லாம் உரைத்தான் -
சொல்லத்தக்க வார்த்தைகளையெல்லாஞ் சொன்னான்; (எ - று.) -
எண்டானவனோடியைந்து என்று பிரதிபேதம்.  தான் - அசை.      (318)

19.-சிவேதன்செய்கையையெல்லாம் சொல்லி ஸ்ரீக்ருஷ்ணன்
விராடன்கவலையைப் போக்குதல்.

சிவன்றன்னைநோக்கிச்சிவேதன்றவஞ்செய்தவாறும்
அவன்றன்னருளாற்பலவாயுதம்பெற்றவாறும்
இவன்றன்பகைசெற்றதும்யாவுமியம்பியுள்ளம்
கவன்றன்புறாமன்விராடன்கவற்சிதீர்த்தான்.

      (இ - ள்.) சிவன் தன்னை நோக்கி - சிவபெருமானைக் குறித்து, சிவேதன்
தவம் செய்த ஆறுஉம் - சிவேதன் தவஞ்செய்த விதத்தையும், அவன் தன்
அருளால் - அந்தச் சிவபெருமானுடைய திருவருளினால், பல ஆயுதம் பெற்ற
ஆறுஉம் - (இந்தச்சிவேதன்) பலபடைக்களலங்களைப் பெற்றவகையையும்,
இவன் தன் பகை செற்றதுஉம் - இந்தச்சிவேதன் தன்பகையை யழித்ததையும்,
யாவும் - எல்லாவற்றையும், இயம்பி - (விராடனிடம்) சொல்லி, (வெகுநாளாகச்
சிவேதனது பிரிவினால்), உள்ளம் கவன்று - மனம் வருந்தி, அன்பு உறா -
மனக்கசிவு கொள்ளாம லிருந்த, மன் விராடன் தன் - விராடமன்னவனுடைய,
கவற்சி - துன்பத்தை, தீர்த்தான்-;

      சிவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது
வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து அவன்பேரெழுதிய
அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்ட