வழங்கி-தந்து, '(நீர்), எந்த நகரீர்-எந்தநகரத்தீர்? “யாம் உணர உரைமின்- நாங்கள் அறியும்படி சொல்லுங்கள்,' என்றாள் - என்று வினவினாள்; (எ - று.) எளியவள் போன்று வந்தவளையும் விராடன் மனைவி உபசரித்தனளென்றமையால், அவளது தருக்கின்மைமுதலிய நற்பண்புகள் வெளியாம். (31) 32.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வந்தவள் தன்னை இன்னாளென்று தெரிவித்து, 'தான் வந்த நோக்கத்தையும் தெரிவித்தல். தான்விரதமாயைபுரிசகுனிபொருசூதால் கான்விரதமாகவுறைகாவலர்கள்கோயில் மான்விரதநோக்கியர்மருங்குறவிருந்தேன் யான்விரதசாரிணியெனும்பெயரினாளே. |
(இ-ள்.) தான்-சுயமாக, விரதம் மாயை புரி-விரஸமான [திருப்தி விளைக்காது வெறுப்பைவிளைக்கிற] வஞ்சனையைச் செய்கின்ற, சகுனி- சகுனியென்பான், பொரு-ஆடின, சூதால் - சூதாட்டத்தால், கான் விரதம் ஆக உறை-காட்டில் வசித்தலை விரதமாகக் கொண்டு வாழ்ந்த, காவலர்கள் - அரசர்களாகிய பாண்டவர்களின், கோயில் - அரண்மனையிலே, மான் விரதம் நோக்கியர்-மான்கள் (தோற்று) ஒழிவதற்குக்காரணமான கண்ணழகையுடைய (அப்பாண்டவரின்) இராணிமாரின், மருங்கு-சமீபத்திலே, உற-பொருந்த, இருந்தேன்-: யான்-,-விரதசாரிணி எனும் பெயரினாள் - விரதசாரிணியென்ற பேரையுடையேன்; (எ - று.) விரதசாரணியென்று பிரதிபேதம். இந்தச்செய்யுளில் திரிபு என்னும் சொல்லணி காண்க. விரதம் என்பது முதலடியில் விரஸமென்ற வடசொல்லின் திரிபும், இரண்டாமடியில் வ்ரதமென்ற வடசொல்லின் திரிபும் ஆம்: மூன்றாமடியில் விரதம் என்பது-ஒழிந்திடுகை யென்ற பொருளுள்ள வடசொல். “யான் விரதசாரிணி யெனம் பெயரினாள்- தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி. வ்ரதசாரிணீ என்ற வடசொல்- வ்ரதத்துடன் நடப்பவள் என்று பொருள்படும். (32) 33. | பூசுவனசுற்றுவனபூண்பனமுடிப்ப தேசொடுவனப்புநனிதிகழும்வகையணிவேன் வாசவனொடொத்தமனுகுலவரசன்மனைவி ஏசறவுனக்கெலுவையாகுவதெனெண்ணம், |
(இ-ள்.) பூசுவன - (உடம்பிற்) பூசுதற்கு உரிய கலவைச்சாந்து முதலியனவும், சுற்றுவன - சுற்றிக்கட்டவேண்டிய மாலை முதலியனவும், பூண்பன - பூணுதற்கு உரிய ஆடையணிகலன்களும், முடிப்ப - முடிக்கவேண்டிய கூந்தல்தார் முதலியனவும், தேசொடு வனப்பு நனி திகழும் வகை-ஒளியோடு அழகும் மிகவும் விளங்கும்படி, அணிவேன்-அலங்காரமுறச் செய்வேன்; வாசவனொடு ஒத்த மனுகுலம் அரசன் மனைவி - இந்திரனோடொத்தவனும் மனுகுலத்துத் தோன்றியவனு |