பக்கம் எண் :

24பாரதம்விராட பருவம்

மானவிராடராசனுடைய மனைவியே! உனக்கு-, ஏசுஅற - குற்றமில்லாமல்,
எலுவை ஆகுவது - தோழியாக அமையவேண்டு மென்பது, என் எண்ணம் -
என்கருத்தாம்; (எ - று.)                                       (33)

34.எந்தைமனையிற்பயிலிளம்பருவநாளில்
கந்தருவர்காவல்புரிகற்புடையளானேன்
இந்துநுதலாய்மனிதர்யார்முகமுநோக்கேன்
வந்தனெனின்மாளிகையின்வைகும்வகையென்றாள்.

      (இ -ள்.) எந்தை மனையில்-எந் தந்தையினுடைய வீட்டில், பயில்-
வாழ்ந்த, இளம்பருவம் நாளில்-இளம்பருவத்தினத்தில் (தொடங்கி), கந்தருவர்
காவல் புரி - கந்தருவர் (யாதொருதீங்கும் வராமற்) காவல் செய்கின்ற, கற்பு
உடையள் ஆனேன் - கற்பையுடையவளானேன்; இந்து நுதலாய் - சந்திரன்
போன்ற  முகத்தையுடையவளே!  மனிதர் யார்  முகம்உம்  நோக்கேன் -
எந்த மனிதருடையமுகத்தையும் கண்ணெடுத்துப் பாரேன்: நின் மாளிகையின்
வைகும் வகை - உன்வீட்டிலே தங்கிவாழும்படி, வந்தனென் - (இப்போது)
வந்துள்ளேன், என்றாள்-என்று கூறினாள், (அந்த வண்ணமகள்); (எ - று.)

     கீழிரண்டுகவிகளால், தான் இன்னாளென்பதையும், தனக்குத் தெரிந்த
தொழிலையும், தான் அங்குவந்ததன் நோக்கத்தையும் தெரிவித்தவள், இந்தச்
செய்யுளினால், தான் வலியோராற் பாதுகாக்கப்படும் கற்புடையளென்பதைக்
கூறுகிறாள்.  'உனக்குஎலுவையாளுவதெனெண்ணம்' என்று கீழ்க்கவியிற்
கூறியதனால், 'நின்மாளிகையின் வைகும்வகை வந்தனென்' என்று இங்குக்
கூறியது-அனுவாதமென்க: நான் உன்மாளிகையில் வண்ணமகளாக
வாழ்வேனென்றாலும், என்கற்பிற்கு இழுக்கமுண்டாக்க எவராலும் ஆகாதென்று
கூறியவாறு.                                               (34)

35.-வண்ணமகள்கூறியதுகேட்டுச்சுதேஷ்ணை
தன்னிடத்து வண்ணமகளாகஇருக்குமாறு பணித்தல்.

வண்ணமகள்கூறியவைமகிழ்வினொடுகேட்டுத்
துண்ணெனவெரீஇயினள்சுதேட்டிணைவிரும்பி
விண்ணவர்கள்பாவையரின்மேவுதியெனக்குக்
கண்ணிணையுநீயுனதுகாவலெனதுயிரும்
.

இரண்டுகவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) துண்ணென வெரீஇயினள் - (வந்தவளைக்கண்டதும்)
திடுக்கிட்டு அஞ்சினவளான, சுதேட்டிணை -, -வண்ணமகள்-, கூறியவை-
சொன்னவற்றை, மகிழ்வினொடு கேட்டு - மகிழ்ச்சியோடு செவியேற்று,
விரும்பி-(அவளிடத்து) அன்புபாராட்டி, (அவளைநோக்கி) '(நீ), விண்ணவர்கள்
பாவையரின்-தேவமாதர்போல், மேவுதி-இனிது தங்கியிருப்பாய்: எனக்கு
கண்இணைஉம்நீ - நீ எனக்கு இரண்டுகண்களையும் போல்வாய்: எனது
உயிர்உம்-என்பிராணனும், உனது காவல் - உன்காவற்கு (உட்பட்டது); (எ-று.)