5.-மற்றொழிலில்வல்லவர்அநேகர் அந்த மல்லனுடன் தனித்தனி பொருதல். அந்தமற்றொழிலின்மிக்கோரநேகர்நீடசனியொப்பார் வந்தமற்றலைவன்றன்னைவருதிநீயெம்மொடென்று முந்தமற்கலைநூல்சொன்னமுறைமையினரசன்காணச் சந்தமற்சமரஞ்செய்தார்தனித்தனியொருவராக. |
(இ -ள்.) அந்த மல் தொழிலில் - (வந்த மல்லவீரன் வல்லமை பெற்றுள்ள) அந்த மற்போர்த் தொழிலிலே, மிக்கோர் - மிகவல்லவரான, அநேகர்-, நீடு அசனி ஒப்பார்-பேரிடியை யொப்பவராய் (க்கர்ச்சித்துக்கொண்டு), வந்த-, மல் 'தலைவன் தன்னை - மல்லர் தலைவனை, 'எம்மொடு - எம்முடனே, நீ-, வருதி-(மற்போர்செய்ய) வருவாய், 'என்று-என்று அறைகூவி,-அரசன் காண - விராட மன்னவன் கண்டுகொண்டிருக்க, முந்த - விரைவாக, மல்கலை நூல்சொன்ன முறைமையின் - மற்போர்த்தொழிலைப்பற்றிய சாஸ்திரஞ்சொன்ன முறைமையினால், சந்தம் மல் சமரம் - அழகிய மற்போரை, தனித் தனி ஒருவர் ஆக - தனித்தனியே ஒவ்வொருவராக, செய்தார்-; (எ - று.) கலை -சாஸ்த்ரம். போர்க்கு வரும்போது பெருமுழக்கஞ்செய்து கொண்டு வருவதனால், அசனியை யொப்பார் என்றது. (43) 6.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:அரசனிடத்திருந்த மல்லர் வந்தமல்லனோடு தனித்தனிபொருதுதோற்க,அரசன்வந்தவனை விசேஷமாகச் சம்மானித்தலைக்கூறும். தத்தியுந்தோளுந்தோளுந்தாக்கியுஞ்சென்னிகொண்டு மொத்தியும்பற்பல்சாரிமுடுகியும்வயிரக்கையால் குத்தியுங்காலுங்காலுங்கோத்துமற்கூறுதோன்ற ஒத்தியும்பாறையென்னவுரனுடனுரங்கள்சேர்த்தும். |
(இ -ள்.) தத்திஉம் - தாவியும், தோள்உம் தோள்உம் தாக்கி உம்- தோளுடன் தோள் பொருந்த மோதியும், சென்னி கொண்டு மொத்திஉம் - தலையைக்கொண்டு இடித்தும், பல் பல் சாரி முடுகிஉம் - பலபல சாரிகளால் விரைந்தும், வயிரம் கையால் குத்திஉம் - வயிரம்போலுறுதியான கைம்முஷ்டிகளாற் குத்தியும், கால்உம் கால்உம் கோத்துஉம் - காலுடன் கால் சேரப்பின்னியும், மல் கூறுதோன்ற - மற்போரின் கூறுபாடு புலப்பட, ஒத்திஉம்- சிறிதுபின்னிடைந்தும், பாறை என்ன உரனுடன் உரங்கள் சேர்த்துஉம் - பாறை ஒன்றோடொன்று சேர்க்கப்படுவதுபோல மார்போடு மார்பைச் சேர்த்தும்,- (எ -று.)-'ஆரம ருடற்றி' என அடுத்த கவியோடு இயையும். 'ஓரொருமல்லராக ஆரமருடற்றி' என மேல் வருவதனால், 'உரனுடனுரத்தைச் சேர்த்தும்' என்று பாடமிருப்பின் நலம். சாரி - |