வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சஞ்சரித்தல். ஒத்தியும் - ஒற்றியும் என்றலுமாம். (44) 7. | ஒரொருமல்லராகவொருதனிமல்லன்றன்னோடு ஆரமருடற்றிமல்லரனைவருமழிந்தபின்னர் வீரரில்வீரனானவென்றிவேல்விராடன்மெச்சித் தேரின்மேல்வந்தமல்லன்றனக்கெலாச்சிறப்புஞ்செய்தான். |
(இ -ள்.) ஒரு தனி மல்லன் தன்னோடு - ஒப்பற்ற தனித்த மல்லனான (வந்த அந்த) வீரனோடு, ஓர் ஒரு மல்லர் ஆக - ஒவ்வொரு மல்லவீரராக, ஆர் அமர் - அருமையான மற்போரை, உடற்றி - பொருது, (இங்ஙனம்), மல்லர் அனைவர்உம் - எல்லாமல்லர்களும், அழிந்த பின்னர் - தோற்ற பிறகு,-வீரரில் வீரன் ஆன வென்றிவேல் விராடன் - வீரர்கட்குட் சிறந்த வீரனென்று மதிப்புப்பெற்ற வெற்றிபொருந்திய வேற்படையையுடைய விராடராசன், மெச்சி - (வந்த மல்லவீரனைப்) பாராட்டி, தேரின் மேல் வந்த மல்லன் தனக்கு - தேரின்மேல்வந்த (அந்த) மல்லனுக்கு, எலாம் சிறப்புஉம் - எல்லாச்சிறப்புகளையும், செய்தான்-; (எ - று.) வீரத்தின்சிறப்புப் பெருவீரனானவிராடனுக்குத் தெரியு மாதலால், வந்தமல்லனை மெச்சி பெருமல்லற்குச் செய்யவேண்டிய சிறப்புக்களை அந்த மல்லனுக்கு விராடமன்னவன் செய்தா னென்க. 8.-மற்றைநாள்தருமபுத்திரன், மன்னனிடம் 'இந்தமல்லனைப் பலாயனன்வெலத்தக்கான்'என்ன, அரசன்அவனையழைப்பித்தல். அன்றுபோய்மற்றைநாளினரசனோடறத்தின்மைந்தன் வென்றமாமல்லன்றன்னைவெல்லுதற்குரியமல்லன் இன்றுநின்மடையர்தம்மிற்பலாயனனென்போன்றன்னை அன்றிவேறில்லையென்றானரசனுமழைமினென்றான். |
(இ -ள்.) அன்று போய்-, மற்றைநாளின் - மற்றைநாளிலே,-அரசனோடு - விராடராசனுடனே, அறத்தின்மைந்தன் - தருமபுத்திரன், 'வென்ற-(நேற்று) வெற்றிபெற்ற, மா மல்லன் தன்னை - சிறந்த மல்லவீரனை, வெல்லுதற்கு உரிய - ஜயிப்பதற்கு ஏற்ற, மல்லன் - மற்போர்செய்பவன், இன்று - இப்போது, நின் மடையர் தம்மில் - உன்னுடைய சமையற்காரர்க்குள், பலாயனன் என்போன் தன்னை அன்றி - பலாயனனென்பவனை யல்லாமல், வேறு - வேறொருத்தர், இல்லை-,' என்றான்-; அரசன்உம் - விராடராசனும், 'அழைமின் - (அந்தப் பலாயனனை) அழைத்துவாருங்கள்,' என்றான் - என்று கூறினான்; (எ - று.) பலமல்லர்களும் அந்தமஹாமல்லனைக் கண்டு அஞ்சினார்களாகச் சிலர் எதிர்த்துத் தோற்றார்கள்: அந்தமஹாமல்லன் அப்போது விராடனைப் பார்த்து 'நான் மல்லராஜன்: என்னோடு பொரத்தக்கார் எவருமில்லை: சிங்கம் புலி முதலியவற்றுடனும் பொரவல் |