யோடு,மீடலும்-மீளாநிற்கையில்,-அம்பரத்தவர் கற்பகம் கா நிகர் அந்த அந்தப்புரத்து அகல் காவினில்-தேவலோகத்தவரின் கற்பகச் சோலையையொத்த அந்த அந்தப்புரத்தைச்சார்ந்த அகன்றுள்ள சோலையிலே, மெல் மலர் கொய்து-மெல்லிய மலர்களைப் பறித்துக் கொண்டு, வெம் புகர் களிறு ஐவர்தம் தேவி ஆம் விரதசாரிணி - விரும்பத்தக்க முகப்புள்ளிகளையுடைய ஆண்யானை போன்றவரான பஞ்சபாண்டவரின் மனைவியாகிய விரதசாரிணியென்கிற, இளங்கொம்பொடுஒத்து- இளங்கொம்புபோன்று, இடை சோர பணைத்த - இடுப்பானது ஒல்கிநிற்குமாறு பருத்துள்ள, பொன் கொங்கையாள் - அழகிய ஸ்தநங்களையுடையவள், இவன் முன்னல்-இந்தக்கீசகனுடைய முன்னிலையிலே, குறுகினாள்-நெருங்கினாள்; (எ -று.) தமக்கையைப்பணிந்துவிட்டுக் கீசகன் மீள்கையில், அந்தப்புரத்துச் சோலையில் பூப்பறித்துக்கொண்டுமீண்ட விரதசாரிணியென்ற திரௌபதிக்கு அவன் முன்னர்வருமாறு நேர்ந்ததென்க. அந்தப்புரம்-ராஜஸ்திரீகள் வசிக்குமிடம். (54) 3.-கீசகன் திரௌபதியைக்கண்டதும் அவள்மீது மோகங்கொள்ளுதல். இயற்கையானகவினுடைப்பாவையையிறைவன்றேவிக்கிளையவன் கண்டனன், செயற்கையாநலன்கண்டிலன்யார்கொலித் தெரிவையென்றுதன் சிந்தையினோக்கினான், மயற்கையாலழிந்தானைம்புலன்களும் வழக்கொழிந்து மதிமருண்டானிணைக், கயற்கையானக்கயற்றடங்கண்ணியைக்கண்டகாட்சியிற் காமுகனாகியே. |
(இ -ள்.) இணை கயல் கையான்-இரட்டைக்கயல்மீன் இரேகையைக் கையிலே யுடையவனாகிய, இறைவன் தேவிக்கு இளையவன் - விராடராசனுடைய மனைவிக்குத் தம்பியாகிய கீசகன்,- செய்றகை ஆம் நலன்- (ஆடைஆபரணம் முதலியவற்றால் தோன்றும்) செயற்கையான அழகை, கண்டிலன்-காணாதவனாகி,-இயற்கை ஆன கவின் உடை பாவையை - இயற்கையழகை யுடையவளான திரௌபதியை, கண்டனன்-கண்டான்: அ கயல் தடங்கண்ணியை - கயல்மீன்போன்ற விசாலமான கண்களையுடையவளான அந்தவிரதசாரிணியை, கண்ட - (அங்ஙனம்) பார்த்த, காட்சியில் - காட்சிமாத்திரத்திலேயே, காமுகன் ஆகி-, இ தெரிவை யார்கொல் என்று தன் சிந்தையின் நோக்கினான்-'இந்தமாது யாவளோ?' என்று தன் மனத்திலே நாடி,- மயற்கையால் - காமமோகத்தினால், அழிந்தான் - மனமழிந்து, ஐம்புலன்கள்உம் வழக்கு ஒழிந்து - (ஐம்பொறிகளும்) ஐம்புலன்களின்மேற் செல்லுதல் நீங்கி, மதி மருண்டான் - புத்தியில் மயக்கங்கொண்டான்; (எ - று.) மகாவீர னானதால், உத்தமலட்சணமான இணைக்கயலிரேகை கீசகன் கையி லமைந்தது. (55) |