13.-கீசகனாதரத்தையாற்றநினைந்தஅவன்சேடியர்சுதேஷ்ணை யிடம்வண்ணமகளைக்கீசகன்கண்டால்தான்ஆவிநிலைக்குமென்று வேண்டுதல். பாவிதன்மனைச்சேடியரானவர்பலரும்வந்துபடியுடைமன்னவன் தேவிதன்னைவணங்கியக்காமுகன்சிந்தைநோயுஞ்செயலும்புகன்றெழிற் காவியங்கண்ணவளைத்தனதுகண்காணினுந்தணியுங்கடுங்காதலும் ஆவியும்பெறுமெய்யணுகானினதாணையென்றனராதரமாற்றுவார். |
(இ -ள்.) பாவிதன்-பாபிஷ்டனான கீசகனுடைய, மனை-வீட்டிலுள்ள, சேடியர்ஆனவர் பலர்உம் - பணிப்பெண்கள் பலரும், வந்து-,-படி உடை மன்னவன் தேவி தன்னை - பூமியைப் பாதுகாத்தலுடைய விராடமன்னவனுடைய மனைவியை, வணங்கி-, ஆதரம் ஆற்றுவார்- (அந்தக்கீசகனுடைய) காமவிடாயைத் தணிவிக்க முயல்பவராய்,- அ காமுகன் சிந்தைநோய்உம் செயல்உம் புகன்று - காமநோய் கொண்டவனான அந்தக்கீசகனுடைய மனத்திலுள்ள காமநோயையும் (அதற்கு ஏற்ப அவன் மலரணை முதலியவற்றால் வெப்பங் கொள்ளுஞ்) செய்கையையும் சொல்லி,- 'எழில் காவி அம் கண்ணவளை - அழகிய கருங்குவளைமலர்போலும் அழகிய கண்களையுடைய அந்த வண்ணமகளை, தனது கண் காணின்உம் - (அந்தக்கீசகன்) தன் கண்களாற் கண்டாலும், கடுங் காதல்உம் தணியும் - (அவன்இப்போதுகொண்டுள்ள) கொடியகாதல் தணியப்பெறுவான்: ஆவிஉம் பெறும் - தன்னுயிரும் இறவாது நிலைத்திருக்கப்பெறுவான்: மெய் அணுகான் - அவளுடம்பைக் கட்டித் தீண்டான்: (இவ்விஷயத்தில்), நினது ஆணை-,' என்றனர் - என்று கூறினார்கள்; (எ - று.) பிறர்மனைநச்சுதலென்பது பஞ்சமகாபாதகங்களு ளொன்றாதலால், அந்தப்பாதகத்திற்குத் துணிந்த கீசகனை, 'பாவி' என்றார். ஆதரம் மாற்றுவார் என்றும் பிரிக்கலாம். காதலும் ஆவியும் - எச்சவும்மைகள். (65) 14.-அந்தச் சேடியரின்சொல்லைக் கேட்டதும், சுதேட்டிணை கீசகன்செயலுக்குவருந்திப் புலம்புதல். பாசகாரிகளாமைம்புலன்களும்பரிவுகூரப்பரிந்துயர்ந்தோர்புகல், வாசகாதிகள்கற்றுந்தெளிந்திலைமதனவேதத்தின்மார்க்கமும் பார்த்திலை, நாசகாலம்வரும்பொழுதாண்மையும்ஞானமுங்கெடுமோநறுந்தார் முடிக், கீசகாவென்றழுதனளம்மொழிகேட்டபோதக்கிளிநிகர்மென்சொலாள். |
(இ - ள்.) அ மொழி கேட்ட போது -(சேடியர் சொன்ன) அந்த வார்த்தை செவிப்பட்டபோது,-அ கிளி நிகர் மெல் சொலாள் - கிளிபோன்று மென்மையாகப் பேசுபவளான அந்தச்சுதேஷ்ணை,-'பாசகாரிகள் ஆம்- மனப்பிணிப்பை யுண்டாக்குவனவான, ஐம்புலன்கள் |