பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 45

உம்-(பஞ்சேந்திரியங்கட்கு உரிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்)
ஐந்துவிஷயங்களும், பரிவு கூர - துன்பத்தை மிகுவிக்க, பரிந்து-(அதனால்)
மனம் வருந்தி,-உயர்ந்தோர் புகல்வாசக ஆதிகள் கற்றுஉம் தெளிந்திலை -
பெரியோர் கூறியுள்ள நீதிவாக்கியங்களையெல்லாம் படித்திருந்தும்
மனத்தெளிவு பெற்றாயில்லை: மதன(ன்) வேதத்தின் மார்க்கம்உம் பார்த்திலை -
மன்மதவேதத்தின் முறைமையையும் காண்கின்றாயில்லை: நறுந் தார் முடி கீசகா
- நறியமாலையையணிந்த முடியையுடைய கீசகனே! நாசகாலம் வரும் பொழுது-
, ஆண்மைஉம் - மனவுறுதியும், ஞானம்உம் - நல்லறிவும், கெடும் ஓ - கெட்டு
விடுமோ?' என்று - எனச்சொல்லி, அழுதனள் - புலம்பலானாள்; (எ - று.)

      பாசம்- பாஸம்: கயிறு என்ற பொருளுள்ள இவ்வடசொல், மனப்பிணிப்புஎன்ற பொருளை இலக்கணையாற் காட்டும்.  மதனவேதம் -
வாத்ஸ்யாயனம்;அடியோடு தன்மீது விருப்பமில்லாதவரைப் புணரலாகா
தென்பது,மதனவேதத்தின் மார்க்கமாம்.                       (66)

15.-மூன்று கவிகள்-ஒருதொடர்:சுதேட்டிணை'நின்கற்புக் குலையா
மல் கீசகனாவிகாக்க,இந்தமாலையைக் கொடுத்துமீள்வாய்'என்று
 ஆகுலத்தோடு வண்ணமகளைவேண்டினமையைத்
தெரிவிக்கும்.

ஆகுலத்தொடுநெஞ்சந்தளர்ந்துதன்னருகினின்ற
                                வருந்ததியேநிகர்,
மீகுலக்கொடிதன்னிருதாள்மிசை வீழ்ந்துநின்றன்
                            விழியருளுண்டெனில்,
கோகுலத்தினுயர்ந்தவென்காதலன் கோலுநீதியுங்குன்றா
                                   வெனதுரை,
நீகுலைக்கிலனைத்துமின்றேகெடு நேரிழாயிதுநெஞ்சுறக்
                                  கேட்டியால்.

      (இ -ள்.) (பின்பு அந்தச்சுதேஷ்ணை),- ஆகுலத்தொடு -
வருத்தத்தினால், நெஞ்சம் தளர்ந்து - மனம் சோர்ந்து, தன் அருகில் நின்ற-,
அருந்ததி நிகர் - அருந்ததியை யொத்த, மீ குலம் கொடி தன்-சிறந்த
குடியில்தோன்றிய கொடி போன்றவளான திரௌபதியின், இரு தாள்மிசை
வீழ்ந்து - இரண்டு பாதங்களிலே வணங்கி,- (அவளைநோக்கிப் பின்வருமாறு
கூறலானாள்): நேர் இழாய் - அழகிய ஆபரணங்களை யணிதற்குரியவளே!
நின்தன் - உன்னுடைய, விழி அருள் உண்டு எனில்-கண்ணின் அருள்நோக்கம்
உண்டு என்றால், (அப்போது), கோ குலத்தில் - அரசர்திரளில், உயர்ந்த -
மேம்பட்ட, என் காதலன் - என் கணவனுடைய, கோல்உம் - செங்கோலும்,
நீதி உம்-அரசநீதியும், குன்றா-பழுதுபடா: எனதுஉரை - என் பேச்சை, நீ-,
குலைக்கில்-(செய்யாது) தட்டினால், அனைத்துஉம் - (என் காதலனுடைய
கோலும் நீதியுமாகிய) எல்லாமும், இன்றுஏ கெடும் - இன்றைத்தினமே அழியும்:
இது - (யான்சொல்லிய) இந்தப்பேச்சை, நெஞ்சு உற-மனம் பொருந்த, கேட்டி -
கேட்பாய்; (எ - று.)

      நீகீசகனிடத்துப் போய்வரவேணு மென்று நேரே சொல்லுதற்குக் கூசிப்
பூர்வபீடிகையாக இங்ஙனம் சுதேஷ்ணை கூறுகின்றாள்.