விழியருள் உண்டெனில் என்பதன் கருத்து - என்மீது கருணை கொண்டு நான் சொல்வதையேற்றுப் புரிவாயோயானால் என்பது. இது என்று சுட்டியது- எனதுரை நீ குலைக்கில் அனைத்துமின்றே கெடும் என்பதை. கீசனது புஜபலத்தினாலேயே விராடன் தேசத்தை இனிது ஆள்கின்றானென்பதுகருதி, சுதேஷ்ணை இவ்வாறு கூறினாள். ஆல்-ஈற்றசை. (67) 16. | இளையனாதலினென்னிளையோன்மனத் தெண்ணமின்றியிகன் மதனம்பினால், அளையுமேனியனாகிநின்மெய்ந்நல மாதரித்தின்றடாது செய்நீர்மையால், விளையுமேகொடுவெம்பழியிப்பழிவிளைவுறாமல் விரகினாக்கானோய், களையுமாறெண்ணினாங்கவனாவியுங் காத்துநின் பெருங்கற்பையுங்காக்குமால். | (இ-ள்.) என் இளையோன் - என் தம்பி, இளையன் ஆதலின் - (அறிவு முதிராத) இளமைப்பருவத்தோ னானதனால், மனத்து-, எண்ணம் இன்றி - ஆலோசனையில்லாமல், இகல் மதன் அம்பினால்- மாறுபாட்டையுடைய மன்மதனுடைய அம்பினாலே, அளையும்-தொளைக்கப்பெற்று, மேனியன் ஆகி - உடம்பையுடையவனாய், நின்மெய் நலம்-உனது உடலினாற்பெறலாகும் இன்பத்தை, ஆதரித்து - விரும்பி, இன்று - இன்றைத்தினம், அடா(த)து - தகாத செயலை, செய்-செய்யத்தொடங்கிய, நீர்மையால் - தன்மையினால், (முடிவில்), கொடு வெம் பழி-மிகக் கொடிய பழி, விளையும்ஏ-உண்டாகுமே: இ பழி விளைவுஉறாமல்-இந்தப்பழி யுண்டாகாதபடி, விரகின் - தந்திரமாக, அ காதல்நோய் - (அவனுடைய) அந்த ஆசைநோயை, களையும் ஆறு- போக்கும்வகையை, எண்ணின் - எண்ணினால், ஆங்கு - அப்போது, (அச்செயல்), அவன் ஆவிஉம்காத்து - அந்தக்கீசகனுடைய உயிரையுங் காத்து, நின் பெருங்கற்பைஉம் காக்கும்-; (எ-று.) - ஆல்-தேற்றம். திரௌபதியின் மேனியைத் தீண்டினால் பிறர்கற்பை யழித்தானென்றபழியும், தீண்டாது உயிரொழிந்தால் பிறர்மனை நயந்து உயிர் நீத்தா னென்ற பழியும் கீசகனுக்கு விளையுமென்னலாம். பழி விளையாமல் அந்தக்கீசகன் உயிருய்வதற்கு உபாயம் மேலிற் கவியிற் கூறுகிறாள்: அச்செயலை நீ செய்யவேணுமென்றே பதினைந்தாஞ் செய்யுளில் சுதேஷ்ணை வேண்டியது. (68) 17. | எண்ணுகின்றனன்யானொன்றுநீமறா தெனதுவாய்மையெதிர் கொண்டிளையவன், நண்ணுமில்லிடைச்சென்றிந்தநாண்மலர்நகைகொண்மாலையை நல்கினைமீளுவாய், கண்ணினின்னுருக்காணினுமற்றவன் கன்னமின்புறக் கட்டுரைகேட்பினும், வண்ணமாமகளேயுயிர்நிற்குநீவாழியேகிவருகெனவாழத்தினாள். |
(இ-ள்.) யான் ஒன்று எண்ணுகின்றனன் - யான் ஒரு வார்த்தையை ஆலோசித்துச் சொல்லுகின்றேன்:நீ -, மறாது - மறுத்துச்சொல்லாமல், எனது வாய்மை - எனது வாயிலிருந்து வருவதை, |