30.-கீசகனால்தொடரப்பெற்று ஓடின திரௌபதி அரண்மனையில் அரசர்காண வந்து வீழ்தல். ஓடியமடக்கொடி யுலகுகாவலன் சூடியமணிமுடிதுலங்குகோயிலின் வாடியகொடியெனவந்துவீழ்ந்தனள் நீடியவேத்தவைநிருபர்காணவே. |
(இ -ள்.) ஓடிய-(அங்ஙனம்) ஓடிப்போன, மடம் கொடி - மடப்பத் தையுடைய கொடிபோன்றவளான திரௌபதி,-வாடிய கொடி என - வாட்டமுற்ற கொடி போல,-வேந்து அவை நீடிய நிருபர் காண - அரச சபையிலே மிக்குள்ள அரசரெல்லாங் காணாநிற்கையில், உலகு காவலன் - விராடதேசத்திற்குத் தலைவனாகிய விராடராசன், சூடிய - அணிந்துள்ள, மணி முடி - இரத்தினம் பதித்த கிரீடத்தோடு, துலங்கு - விளங்குகின்ற, கோயிலின் - அரண்மனையிலே, வந்து வீழ்ந்தனள்-; (எ - று.) தன்முறையீட்டை யுணர்த்துமாறு காவலன்மணிமுடியுடன் துலங்குகோயிலிற் சென்றன ளென்க. இராசசபையிற் பலஅரசர் திரண்டிருப்பாராதலால், 'நீடிய வேத்தவைநிருபர் காணவீழ்ந்தனள்' என்றார். இனி, நிருபர் என்றது-விராடனைக்காட்டுமென்றலும், தருமபுத்திரனைக் காட்டுமென்றலும் உண்டு. நீடிய - பெருமைபெற்ற, வேத்தவை யெனினுமாம். (82) 31.-அங்குக் கீசகன்தன்னிணைக்கையால் திரௌபதியைத் தீண்டக் கருதுதல். தொழுந்தகைமனுகுலத்தோன்றல்கண்ணெதிர் விழுந்தழுந்தெரிவையைவேட்கைநோயினால் அழுந்தியகாமுகனச்சமின்றியே செழுந்துணைக்கைத்தலந்தீண்டவுன்னினான். |
(இ - ள்.) தொழும் தகை - (யாவராலும்) வணங்குதற்கு உரிய நற்குண முடைய, மனு குலம் தோன்றல் - மனுகுலத்திலே தோன்றியவனான, விராடராசனுடைய, கண் எதிர் - கண்ணுக்கு எதிரிலே, விழுந்து-, அழும்- அழுகின்ற, தெரிவையை-பெண்ணாகிய திரௌபதியை, வேட்கை நோயினால்- காதல்நோயிலே, அழுந்திய - ஆழ்ந்து விட்ட, காமுகன் - காமவிச்சையையுடையவனான கீசகன், அச்சம் இன்றி-(பலருங்காண்கையில் நாம் ஒரு பெண்ணைத் தீண்டலாமோ? என்கிற) கூச்சமு மில்லாமல், செழுந் துணை கைத்தலம் - வலிமையுள்ள இரட்டையான (தன்)கைகளால், தீண்ட - (அவளைப்) பற்றுவதற்கு, உன்னினான் - நினைத்தான்; (எ - று.) மனு -வைவஸ்வதமனு. இந்தக்கீசகன் மனுகுலத்தோன்றலின் கண்ணெதிரில் அச்சமின்றித் தெரிவையைத் தீண்ட உன்னிய காரணம் - வேட்கைநோயிலழுந்தியதும், அரசன் தன்னை யொன்றுஞ் |