பக்கம் எண் :

56பாரதம்விராட பருவம்

செயல்உம் - அக்கிரமச் செய்கையையும்,சிந்தையில்கொண்டு
மனத்திலெண்ணி, ஒரு வாய்மை கூறஉம் - ஒருவார்த்தை சொல்லவும்,
அஞ்சினான்-; (எ - று.)

     அரசனாதலால் நீதியிற்பிழைத்தகீசகனைத் தண்டிக்கவேண்டியதே
முறையாயிருக்க அதைச் செய்யாவிடினும், 'நீ செய்வது முறையன்று:
தகாதசெயல்' என்றாவது சொல்லியிருக்கலாமே; அதுவுஞ் செய்திலனென்பதாம்.
'வாய்மையும்' என்ற இடத்தினின்று பிரித்துக் கூட்டப்பட்ட உம்மை,
எச்சப்பொருளது.  மண் - அலக்ஷ்யம் தொனிக்கின்றது.              (85)

34.-கீசகன் திரௌபதி இவர்கள்செயலைக்கண்ட வீமன், கீசகனை
யழிக்குமாறு ஒருமரத்தைப் பிடுங்கும்படி வெகுண்டு நோக்குதல்.
  

அடுதொழிற்பலாயன னழுதமின்னையும்
கடுமையிற்பின்றொடர் காளைதன்னையும்
படருறக்கண்டுதன் பாங்கர்நின்றதோர்
விடவியைப்பிடுங்குவான் வெகுண்டுநோக்கினான்.

     (இ - ள்.) அடு தொழில் -(அரண்மனையிலே) சமையல்வேலையி லமர்ந்
திருந்த, பலாயனன் - பலாயனனென்று மாறுபெயர் பூண்ட வீமசேனன்,- அழுத
மின்னைஉம் - அழுதுகொண்டு முன்னே செல்கின்ற மின்னல் போல்பவளான
திரௌபதியையும், கடுமையில் - விசையாக, பின் தொடர் - (அந்தத்
திரௌபதியைப்) பின்னே தொடர்ந்துசென்ற, காளை தன்னைஉம் - இளவெருது
போல்பவனான கீசகனையும், படர் உற - (தன்மனத்துத்) துன்பமுண்டாக,
கண்டு - பார்த்து,- தன் பாங்கர் நின்றது ஓர் விடவியை -
தன்பக்கத்திலிருந்ததொரு மரத்தை, பிடுங்குவான் - (அந்தக்கீசகனை
மோதியொழிக்கும்படி) வேரோடு பிடுங்கும்பொருட்டு, வெகுண்டு நோக்கினான்
- சினக்குறிப்புக்கொண்டு பார்த்தான்; (எ - று.)

     விடவி = விடபீ:  கிளைகளையுடையது எனமரத்திற்குக் காரணக்குறி.
முதலில் மரத்தைப் பிடுங்குவான் வெகுண்டு நோக்கியது, தருமன் கருத்தை
யுணர்தற்பொருட்டென்னலுமாம்.                            (86)

35.-தருமன் அந்தவீமன்செயலைக் குறிப்பாக விலக்குதல்.
 
கனிட்டனதெண்ணமக் கங்கனாகிய
முனித்தகையுணர்ந்தவன் முகத்தைநோக்கியித்
தனிப்பெருமராமரந் தழல்கொளுந்திடாது
உனக்கடுமிந்தன மன்றென்றோதினான்.

     (இ - ள்.) கனிட்டனது-(தன்னினுஞ்)சிறியவனாகிய வீமசேனனுடைய,
எண்ணம் - கருத்தை, அ கங்கன் ஆகிய முனி தகை - அந்தக் கங்கனென்று
மாறுபெயர்பூண்ட  துறவியாகிய நற்குணமுள்ள தருமபுத்திரன், உணர்ந்து -
தெரிந்துகொண்டு, (அச்செயலைத் தடுக்குமாறு), அவன் முகத்தை நோக்கி -
அந்த வீமசேனனுடைய முகத்தைப் பார்த்து, 'இ தனி பெரு மராமரம் - இந்தத்