நான்கு கவிகள் - ஒருதொடர்.
(இ - ள்.) '(என்னை), தீண்டுதல்-,தகாது-', என - என்று சொல்லவும்,- செம்மை ஒன்று இலான் - நற்குணம் சிறிதுமில்லாதவனாகிய கீசகன், வேண்டிய(து)-(தான்) விரும்பியசெயலை, செய்வது - செய்யவிடுவது, வேந்து நீதிஓ - அரசநீதிக்கு ஏற்குமோ? ஆண்தகை - ஆண்மைக்குண முடையோனே! நீ-, இதற்கு - இந்தக் கீசகனுடைய செய்கைக்கு, 'அல்ல - (இது) செய்யத்தக்கதல்ல: (அன்றி), ஆம் - (இது) செய்யத்தக்கதே,' எனா - என்று, ஈண்டு - இப்போது, ஒரு மொழி - (இவ்விரண்டில்) ஒருசொல்லை, கொடாது - தராமல் [வாய்விட்டுச் சொல்லாமல்], இருப்பது-, என் கொல்ஓ - என்னகாரணமோ? (எ - று.) நான்கீசகன்செயலைக்குறித்து உன்னிடம் முறையிட்டுக் கொள்ளுகிறேனே!இப்போது இந்தக்கீசகன்செயலை மன்னவனாகிய நீ கண்டிக்கவாவதுவேண்டும்: அல்லது அது செய்யமுடியாவிட்டால், அவன்செயல் சரியேயென்றாவது பாராட்டவேண்டும்: இவ்விரண்டில் ஒன்றுஞ்செய்யாது இருப்பதும்ஒருமுறையோ! என்கிறாள். அக்கிரமஞ்செய்வதைக் கண்டிப்பதுசெங்கோலன்முறை: அக்கிரமத்தைச்சரியென்பது கொடுங்கோலன்முறை:இவ்விரண்டில் ஒன்றிலுஞ் செல்லாதது என்னே! என்கிறாள். வேந்து + நீதி =வேத்துநீதி. (89) 38. | அன்புடைத்தேவிதன்னருகுதோழியாய் நின்பெருங்கோயிலினீடுவைகினேன் என்பெருவினையினாலின்றுன்மைத்துனன் தன்புயவலியினாற்றழுவவுன்னினான். | (இ - ள்.) அன்பு உடை - (என்னிடத்து) அன்புள்ள, தேவி தன் அருகு -(உனது) அரசியின் சமீபத்திலே, தோழி ஆய் - தோழியாகி, நின் பெருங் கோயிலின் - உனது பேரரண்மனையில், நீடு - வெகுநாட்கள், வைகினேன் - தங்கினேன்: என் பெரு வினையினால் - என்னுடைய பெருத்த தீவினையினாலே, இன்று-, உன் மைத்துனன்-, தன் புயம் வலியினால் - தன்னுடைய புஜபலத்தைக்கொண்டு, தழுவ-(என்னை) ஆலிங்கனஞ்செய்துகொள்ளுதற்கு, உன்னினான் - நினைத்தான்; (எ - று.) புயவலிபடைத்திருத்தலால் தான் அக்கிரமச்செயலைச் செய்தாலும் மன்னவன் கண்டிக்கமாட்டா னென்ற கருத்தினாலேயே அந்தக்கீசகன் என்னைத் தழுவநினைத்தது என்று குத்துப்பாடாகத் திரௌபதி எடுத்துக் காட்டுகின்றா ளென்க. மைத்துனன் - மனைவியினுடன் பிறந்தவன். (90) 39. | பெருந்தகையன்றிது பேசலன்றிநீ யிருந்தனையுனக்கரசெங்ஙன்செல்வது வருந்தினர்வருத்தநீமாற்றலாயெனின் அருந்திறலரசநின்னாணைபொன்றுமே. |
|