(இ -ள்.) நீ-, இது பேசல் - (கிசகனைக் கண்டித்துக்) கூறுவதான இச்செயலை, அன்றி - செய்யாமல், இருந்தனை-: பெருந் தகை அன்று - (இது உனக்குப்) பெருமைக்குணமாகாது: உனக்கு-(அநீதி புரிபவரைக் கண்டிக்கமாட்டாத) நினக்கு, அரசு - அரசத்தன்மை, எங்ஙன் செல்வது - எங்ஙனம் நடக்கும்? அரு திறல் - அருமையான திறமையையுடைய, அரச - அரசனே! வருந்தினர் - வருத்தமடைந்தவரின், வருத்தம் - வருத்தத்தை, நீ-, மாற்றலாய் - மாற்ற வல்லமையற்றவன், எனின் - என்றால், நின் ஆணை பொன்றும் - உன்னுடைய அரசுசெலுத்துந்தன்மை அழிந்துவிடும்; (எ - று.)-ஏ - இரக்கம். அரசத்தொழிலென்பது நலிவுபட்டோரைக் காத்தலே யாதலால், அது செய்யமாட்டாத அரசும் அரசோ! என்றவாறு. பெருந்தகை - பண்புத்தொகை. அருந்திறல்என்ற அடைமொழி எள்ளலைக் குறிப்பிக்கு மென்னலாம். (91) 40.-இங்ஙனம் புலம்பிய திரௌபதி அந்தக்கோலத்தோடு மன்னவன்தேவியிடம் வீழ்ந்து ஏங்குதல். எனவிவள்புலம்பிமெய்யேய்ந்தபூழியும் கனதனநனைத்திடுங்கண்ணினீருமாய் மனமிகமறுகிடமன்னன்றேவிபால் இனைவுடனெய்திவீழ்ந்தேங்கிவிம்மினாள். |
(இ -ள்.) என - என்று, இவள் - இந்தத்திரௌபதி, புலம்பி - அழுது, மெய் - உடம்பிலே, ஏய்ந்த - படிந்த, பூழிஉம்-புழுதியும், கனம் தனம் நனைத்திடும்-பருத்த தனங்கள் நனையப்பெற்ற, கண்ணின் நீர் உம் ஆய்- கண்ணீரையுங் கொண்டவளாய், மனம் - (தன்) நெஞ்சம், மிக மறுகிட - மிகவுங் கலங்க, மன்னன் தேவிபால் - விராடமன்னவனுடைய மனைவியாகிய சுதேஷ்ணையினிடம், இனைவுடன் - வருத்தத்துடனே, எய்தி-போய்ச்சேர்ந்து, வீழ்ந்து - கீழ்வீழ்ந்து, ஏங்கி விம்மினாள் - ஏக்கமுற்று அழுதாள்;(எ - று.) ஏங்குதல் - அக்கிரமஞ்செய்தவனையொறுத்துத் தன்னைப் பாதுகாக்கவேண்டியசெயலை மன்னவன் செய்யாமையால் மனவாட்டங் கொள்ளுதல். (92) 41.-மூன்றுகவிகள்-ஒருதொடர்: கங்கனென்று மாறுபேர்பூண்டிருந்த யுதிஷ்டிரன் விராடனுக்கு இடித்து மதிகூறுதலைத் தெரிவிக்கும். பூதலமாண்மையாற்புரக்குமன்னவர் தீதொழில்புரிஞரைத்தெண்டியாரெனின் நீதியுஞ்செல்வமுநிலைபெறுங்கொலோ ஏதிலர் தமரெனவிரண்டுபார்ப்பரோ. |
(இ -ள்.) பூதலம் - பூமியை, ஆண்மையால் - (தமது) பராக்கிரமத்தால், புரக்கும்-பாதுகாக்கின்ற,மன்னவர் - அரசர், தீ தொழில் புரிஞரை - கொடுஞ்செயலைச் செய்கின்றவரை, தெண்டியார்எனின் - சிட் |