சிக்காமற்போவாரே யானால், (அப்போது மன்னவர்க்கு), நீதிஉம் - நியாயமென்பதும், செல்வம்உம் - ஐசுவரியமும், நிலைபெறும் கொல் ஓ- நிலைத்துநிற்குமோ? (முறைசெலுத்தும் மன்னவர் தாம் செலுத்த வேண்டிய நீதிநெறியில்), 'ஏதிலர் - (இவர் நமக்கு) யாதோரியையும் இல்லாதவர்: தமர்- (இவர் நமக்குச்) சுற்றத்தார்', என-என்று சொல்லப்படுகின்ற, இரண்டு-(அந்த) இரண்டையும், பார்ப்பர்ஓ-கருதுவார்களோ? (எ - று.) அரசர்முறைசெலுத்தும்போது 'தமர்', பிறர்' என்று பார்த்தல் தகாதாகையால், தமரிற் சேர்ந்த கீசகன் தீங்குஇழைத்தஇப்போது அவனையுந் தண்டித்தலே தகுதி யென்றவாறு. 'தீத்தொழில்' என வரற்பாலது, செய்யுளோசையின்பம் நோக்கி 'தீதொழில்' என இயல்பாயிற்று. பெறுங்கொல் ஓ என்ற விடத்து, கொல்-அசை; கொல் - வினாவெனில், ஓ அசை. (93) 42. | யாருமில்லொருத்திநினில்லில்வைகினால் ஆர்வமுற்றவள்வயினன்புகூர்வது வீரமோதருமமோவிருப்பமோவிவை பூரியரலாதவர்புரிதல்போதுமோ. |
(இ -ள்.) யார்உம் இல் - வேறொருகதியும் அற்றவளான, ஒருத்தி - ஒருபெண்பிள்ளை, நின் - உன்னுடைய, இல்லில் - மனையிலே, (உன்னையே கதியாகநம்பி), வைகினால் - தங்கினாளானால், (ஒருத்தன்), அவள் வயின்- அவளிடத்து, ஆர்வம் உற்று - ஆசைகொண்டு, அன்பு கூர்வது - காதல்மிகுவது,-வீரம்ஓ-வீரச்செயலோ? (அன்றி), தருமம் ஓ - நியாயத்துக்கு ஏற்றசெயலோ? விருப்பம்ஓ - காதற்செயலோ? இவை - இவ்வாறான செயல்களை, பூரியர் அலாதவர் - கீழ்மக்களல்லாதார், புரிதல் - செய்வது, போதும்ஓ - தகுமோ? (எ - று.) அகதியான ஒருத்திக்கு ஒருதீங்கும் வராதுபார்ப்பது வீரச்செயலும் தருமச்செயலும் ஆகுமன்றி, அவளைப் பலாத்காரஞ் செய்வது காதற்செயலுக்கும் தகாது: இங்ஙன் காதலிப்பதுபோன்ற செயல் அற்பர்செய்யுஞ் செய்கையே யாமென்றவாறு. (94) 43. | கீசகனாயினுங்கேடுசெய்தனன் ஆசைநோய்மன்பதையனைத்தினுக்குமுண்டு ஏசிதுநினக்குமென்றிருந்தவேந்தொடும் வாசகம்பலசொனான்மறைவலானுமே. |
(இ -ள்.) கீசகன் ஆயின்உம் - கீசகனாயிருந்தாலும், கேடு செய்தனன் - செய்யத்தகாத காரியத்தைச் செய்தான்: (இதற்குக் காரணம்), ஆசை நோய் - காதல்நோயென்பது, மன்பதை அனைத்தினுக்கு உம் - மனிதவர்க்கத்திற்கெல்லாம், உண்டு - உள்ளதொன்றே (என்பது): (ஆனால், மன்னவனானவன் தீங்குசெய்தாரை ஒறுக்கவேண்டியவன்: அவ்வாறு தீங்குசெய்த கீசகனை நீ ஒறுக்காது வாளா இருக்கின்ற), இது - இச்செயல், நினக்கு உம் ஏசு - (மன்னவனான) உனக் |