பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 61

கும்குற்றம்விளைப்பதே, என்று - இவ்வாறு, இருந்த - (ராஜசபையிலே)
தங்கியிருந்த, வேந்தொடுஉம் - விராடராசனோடும், வாசகம் பல சொனான் -
பலவாசகங்களைச் சொன்னான்: (யாவனெனில்),-மறைவலான்உம் -
வேதங்களில் வல்லவனான அந்தணவடிவங்கொண்டிருந்த யுதிஷ்டிரனும்;
                                                       (எ -று.)

     இரண்டாவது அடி, முதலடியைச் சமர்த்தித்துநின்றது:
வேற்றுப்பொருள்வைப்பணி.  கீசகனாயினும் என்ற இடத்துள்ள சிறப்பும்மை
-அவன் வலியுடையவனும் மன்னவனுக்கு நெருங்கிய உறவினனும்
என்றபொருளைக் காட்டும்.  நினக்கும் என்ற எச்சஉம்மை - எவ்வாறு
கீசகனுக்கு ஏசு உண்டாக்குமோ அதுபோலவே உனக்கும் ஏசினையுண்டாக்கும்
என்ற கருத்தினது.                                           (95)

44.-விராடன் மனமழிந்து தன்மனையிற் சேர்தல்.

முன்னுறமுனிவரன்மொழிந்தவாய்மையும்
இன்னலோடழுதவளிசைத்தவாய்மையும்
கன்னமூடுறச்சுடக்கருத்தழிந்துபோய்
மன்னனுந்தன்றிருமனையிலெய்தினான்.

      (இ -ள்.) முன் உற -(தன்) எதிராக, முனிவரன் மொழிந்த - முனிச்
சிரேஷ்டனான கங்கனென்ற யுதிஷ்டிரன் சொன்ன, வாய்மைஉம் -
உண்மையான வார்த்தையும், இன்னலோடு - மனவருத்தத்தோடு, அழுது -
புலம்பிக்கொண்டு, அவள் - அந்தத்திரௌபதியாகிய வண்ண மகள், இசைத்த-
சொன்ன, வாய்மைஉம் - உண்மைவார்த்தையும், கன்னம் ஊடுஉற -
காதைத்தொளைத்துக்கொண்டு சென்றதனால், சுட - (தன்) மனத்தைச் சுடவே,
மன்னன்உம் - விராடராசனும், கருத்து அழிந்துபோய் - மனம் அழிந்திட்டு,
தன் திருமனையில் - தன் அழகிய வீட்டிலே, எய்தினான் - போய்ச்சேர்ந்தான்;
(எ - று.)

     'முன்னுற' என்பது - மொழிந்த என்பதனோடு மாத்திர மன்றி, இசைத்த
என்பதனோடும் இயையும்.  'மன்னனுந் தன் திருமனையிலெய்தினான்' என்ற
இடத்து - உம்மை, மேற்செய்யுளில் 'வீமன் மடையி லெய்தினான்'
எனத்தழுவுவதால், எதிரதுதழுவியஎச்சமாம்:  இனி 'மன்னன் தேவிபால்
திரௌபதி யெய்தி' என்றதைத் தழுவுவதால், இறந்தது தழுவியதுஎனினுமாம்.(96)

45.-வீமனும் சமையல்செய்யுமிடத்துக்குச் செல்லுதல்.

கண்ணெருப்பெழவிரு கைந்நெருப்பெழ
உண்ணெருப்பெழத்தனதுடனெருப்பெழ
மண்ணெருப்பெழவெழமடையிலெய்தினான்
திண்ணெருப்பினுமிகுசினங்கொள்வீமனே.

      (இ -ள்.) திண் நெருப்பின்உம் - (எப்படிப்பட்ட பொருளையும்
எரிக்கும்)வலிமையுள்ள நெருப்பைக்காட்டிலும், மிகு சினம் கொள் -
மிக்ககோபத்தைக்கொண்ட, வீமன் -,-கண் நெருப்பு எழ -