பொறைஆடவர்க்கு வேண்டுமென்று வற்புறுத்துக் கூறப்பட்டிருப்பினும் அப்பொறைக்குரிய இடத்து அதனை மேற்கொள்ளுதல் தக்கதேயன்றி, முறையறப் பொருந்தார் புரிந்தபோது அப்பொறையை மேற்கொள்வது தகுதியன் றென்பதாம். இவ்விஷயத்தைவிளக்கப் பின்னிரண்டடிகளை எடுத்துக்காட்டாகப் பேசுகிறார். 50. | அரசவைப்புறத்திற்சௌபலன்சூதி லழிந்தநாளினுமெமை யடக்கி, முரசவெங்கொடியோன்றேசழித்தனனாலின்றுமம்முறைமையே மொழிந்தான், புரசைவெங்களிற்றின்மத்தகம்பிளக்கும் போருகிர்மடங் கல்போலின்னே, துரிசறப்பொருதுகீசகனுடலந்துணிப்பன்யான்றுணைவரோ டென்றான். |
(இ -ள்.) சௌபலன் சூதில் அழிந்த நாளின்உம் - சுபலனது புத்தி ரனாகிய சகுனியோடு ஆடிய சூதாட்டத்தில் தோற்ற காலத்திலும், அரசு அவைப்புறத்தில் - ராஜசபையிலே, (தீண்டாக்காலத்தில் திரௌபதியாகிய உன்னைத் துரியோதனன் துச்சாதனனைக்கொண்டு கொணர்வித்துத் துகிலுரிகையிலும்) எமை-(தன் தம்பியராகிய) எங்களை, அடக்கி - (வெகுண்டு பகையழிக்காதபடி) தடுத்து, முரசம் வெம் கொடியோன் - முரசமென்ற வெவ்விய கொடியையுடைய யுதிஷ்டிரன், தேசு அழித்தனன் - (எங்களுடைய) பராக்கிரமத்தை வெளியிடவொட்டாது செய்தான்: இன்றுஉம் - இன்றைக்கும், அ முறைமைஏ - அந்தக்கிரமத்தின்படியே, மொழிந்தான் - (உன்னைப் பரிபவப்படுத்திய கீசகனை அந்நிலையிலேயே யழிக்கவெட்டாது குறிப்பு) மொழியால் தடுத்திட்டான்: புரசை வெம் களிற்றின் மத்தகம் பிளக்கும் போர் உகிர் மடங்கல் போல் - கழுத்திடு கயிற்றையுடைய கொடிய மதயானையின் மத்தகங்களைப் பிளக்கும் வல்லமையையுடைய போர்செய்யவல்ல நகாயுதமானசிங்கததைப்போல, இன்னே - இப்போதே, பொருது - போர்செய்து, துரிசு அற - (அன்னான் செய்த) குற்றம்நீங்க, கீசகன் உடலம் - அந்தக்கீசகனுடைய உடம்பை, யான்-, துணைவரோடு - (அவனுடைய) தம்பி மார்களுடனே, துணிப்பன் - பிளந்திடுவேன், என்றான் -: (எ - று.) 'இக்கங்குல் புரிவது யாது?' என்று வினாவிய திரௌபதிக்கு, வீமன் 'இன்னே கீசகனுடலத்தைத் துணைவரோடு துரிசறத்துணிப்பன்' என்று விடைகூறியவாறு. தேசு-தேஜஸ்: ஒளி: வீரர்கட்குள் மிக்குத்தோன்றுதற்குக் காரணமான பராக்கிரமம். ஆல் - தேற்றம்: ஈற்றசையுமாம். (102) 51.-தருமபுத்திரன் தடுத்ததற்குத் திரௌபதி காரணங் கூறுதல். மருத்தின்மாமதலைவார்த்தைகேட்டந்த மருச்சகன் மடக்கொடி யுரைப்பாள். உரைத்தநாளெல்லாஞ்சில்பகலொழிய வொழிந்தனவொழி விலாவுரவோய், அருத்தியோடொருவரறிவுறாவண்ண மிருந்தசீரழி வுறுமென்னுங், கருத்துநின்றம்முற்குண்மையிற்றடுத்தான் காலமுந்தேய முமுணர்வான். |
|