நிலைபெறு கற்பி னாளை நேருறநோக்கிப் பின்னும் உலைவுறு காதன் மிஞ்சவுரனழிந் துரைக்க லுற்றான். |
(இ -ள்.) தலைமகன் அல்லான் - சிறந்தகுணமுள்ள மகனல்லாதவனும், வஞ்சம் தனக்கு ஒரு வடிவம் ஆனோன் - வஞ்சமென்பதே ஒரு வடிவுபடைத்தாற் போன்றவனுமான கீசகன்,-நிலை பெறு கற்பினாளை- நிலைத்துள்ள கற்பையுடைய திரௌபதியை, நேர் உற நோக்கி - நேராகப்பார்த்து,-கலைமதி கண்ட-(பதினாறு) கலைவரையும் வளருந்தன்மையுள்ள சந்திரன் தோன்றக்கண்ட, காந்தம் கல் என - சந்திர காந்தக்கல்போல, சிந்தை உருகி - மனமுருகி, பின்உம் - மேலும் [முன்னிலும் மிகுதியாக], உலைவு உறு காதல் மிஞ்ச-வருந்துதற்குக் காரணமான ஆசைநோய் விஞ்சாநிற்க, உரன் அழிந்து - மனவலிமை குன்றி, உரைக்கல் உற்றான் - சொல்லத் தொடங்கினான்; (எ - று.)-கீசகன் உரைக்கலுற்றதை மேற்கவியிற் காண்க. 'கலைமதிகண்ட' என்று அடைமொழி கொடுத்ததனால், காந்தம் - சந்திரகாந்தம் ஆயிற்று. இதுமுதற் பதினொருகவிகள் - முதற்சீரும் நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள். (107) 56.-கீசகன் தன்னை மணக்குமாறு காரணங்காட்டிக் கூற, திரௌபதி சங்கேதமான இடத்தைக் கூறுதல். மன்னவன்வாழ்வுமிந்தவளநகர்வாழ்வுமெல்லாம் என்னதுவலிகொண்டென்பதின்றுனக்கேற்பக்கண்டாய் உன்னைமெய்காக்குந்தேவருறுதியுமுரனுங்கண்டாய் என்னைகொல்லினியுன்னெண்ணென் றிருகரங்கூப்பினானே. |
(இ -ள்.) மன்னவன் வாழ்வுஉம் - விராடராசனது நல்வாழ்க்கையும், இந்த வளம் நகர் வாழ்வுஉம் - இந்த வளமுள்ள விராடநகரம் (மேம்பட்டு) வாழ்ச்சி பெற்றிருப்பதுவும், எல்லாம் - ஆகிய யாவும், என்னது வலிகொண்டு - என்னுடைய வலிமையினாலேயே, என்பது-என்கின்ற இவ்விஷயத்தை, இன்று - இக்காலத்து, உனக்குஏற்ப - உன் மனத்திற்குத் தெரிய, கண்டாய்-(நீ) அறிந்துள்ளாய்: உன்னை மெய்காக்கும் - உன்னுடலைக் காக்கின்ற, தேவர் - கந்தருவதேவரின், உறுதி உம் - (காக்குந்தொழிலிற் கொண்டுள்ள) உறுதியையும், உரன்உம் - வலிமையையும், கண்டாய் - கண்டறிந்துள்ளாய்: இனி-, உன் எண் - உன் கருத்து, என்னை கொல் - யாதோ? என்று -, இரு கரம் - (தன்) இரண்டுகைகளையும், கூப்பினான் - குவித்து(த் தன்மீது மனமிரங்குமாறு) வேண்டிக்கொண்டான்; (எ - று.) 'விராடமன்னவன் பகைவென்று மேம்பட்டிருப்பதும், இந்த நகரம் மற்றைநகரினும் பகைத்துன்பம் முதலியன இல்லாமல் இனிதிருப்பதும் எல்லாம் என் வலிமைகொண்டே யென்பது, விராட |