என்றனளென்பர். 'மாமரத்தைக் கொக்கு என்பது துளு என்றனர், நச்சினார்க்கினியர். விடுத்தலின் - தங்குதலால் என்பாருமுளர். (111) 60.-குறியிடமாகியபொழிலிலுள்ள மண்டபத்தில் வருமாறுகூற, கீசகனும் ஒருப்படுதல். குருட்டியன்மதியினானைக்கோதிலாவறிவின்மிக்காள் மருட்டினளாகியந்தவளர்தடம்பொழிலினோர்சார் இருட்டிடைநிலவுகாட்டுமின்பமண்டபத்தில்வம்மின் உருட்டடந்தேரோயென்றாளவனுமஃதொருப்பட்டானே, |
(இ -ள்.) கோது இலா அறிவில் மிக்காள் - குற்றமற்ற அறிவினால் மேம்பட்டவளான திரௌபதி,-குருடு இயல் மதியினானை - குருட்டுத்தன்மை பொருந்திய புத்தியையுடையவனான அந்தக்கீசகனை, மருட்டினள் ஆகி - மதிமயங்கச்செய்தவளாய்,-'அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்-(நான் குறித்த) அந்தவளர்ந்த பெருஞ்சோலையின் ஒருபுறத்திலுள்ள, இருட்டிடை நிலவு காட்டும் - மிக்க இருட்டிலும் நிலாவெளிச்சம்போன்று பளிச்சென்று தோன்றுவதாகிய, இன்பம் மண்டபத்தில் - இனிதான மண்டபத்தில், உருள் தட தேரோய் - (இனிதுஉருண்டு செல்லுகின்ற) உருளைகளையுடைய பெருந்தேரையுடையவனே! வம்மின்-வாருங்கள்,' என்றாள் - என்று (கூடுதற்கு உரிய இடத்தைக்) கூறினாள்; அவன்உம்-அந்தக் கீசகனும், அஃது-அந்த வண்ணமகளின் பேச்சுக்கு, ஒருப்பட்டான் - சம்மதித்தான்; 'முன்புதன்னை வேண்டாமையை அத்துணைகாட்டியவள் இப்போது இசைந்து, இருட்பொழுதில் தனித்துவருதி என்கிறாளே? இவள் நம்மைக்கொல்ல விரகு தேடியிருந்தால் என்செய்வது?' என்று கருதி அதற்காக ஆராய்ச்சியும் செய்யவேண்டியிருக்க அஃது சிறிதுமின்றி, கீசகன் இசைந்ததனால், அவனை 'குருட்டியன் மதியினான்' என்கின்றார், தேரோய் வம்மின் - ஒருமைப் பன்மைமயக்கம். உருள் என்பது தடந்தேரோய் என்ற விளியோடு இயைந்து, அமங்கலப்பொருளைக் காட்டுவதாதலையும் அறிக. வம்மோஎன்ற பாடத்துக்கு, வம்-வாரும் என்பதன் மரூஉ: ஓ-அசை: மோ-அசையுமாம். (112) 61.-திரௌபதி அச்செய்தியைவீமனிடத்துக்சொல்லிவிட்டு அப்பகலைப் போக்கியமை. குறியவன்றனக்குநேர்ந்தகொடியவெங்கொலைவேற்கண்ணாள் தறிபொருகளிற்றினன்னசமீரணன்மகனையெய்திச் செறிவொடக்காளையோடுசெப்பியயாவுஞ்செப்பிப் பிறிதொருகருத்துமின்றிப்பெரும்பகல்போக்கினாளே. |
(இ -ள்.) அவன் தனக்கு குறி நேர்ந்த - அந்தக்கீசகனுக்குக் கூடுமிடத்தை உடன்பட்டுக்கூறிய, கொடிய வெம் கொலை வேல் கண்ணாள்- மிகக்கொடிய கொலைசெய்யவல்ல வேற்படை போன்ற கண்களையுடையவளான அந்தத்திரௌபதி, தறி பொரு களிற்றின் - கட்டுத் |