களாலும்இறுகப்பற்றினான் வீம னென்பதாம். எண் - ஏண் என்பதன் விகாரமெனின், வலிமையென்று பொருளாம். (124) 73.-வீமன் கீசகன்திறத்துக்கருதிய செயலைமுடிக்கத் தொடங்குதல். பற்றினான்பற்றியபாணியாலெழச் சுற்றினான்கறங்கெனத்தூணமொன்றினோடு எற்றினான்சென்னியையெடுத்ததன்வினை முற்றினானெடும்பெருமூச்சனாகியே. |
(இ -ள்.) பற்றினான் - (அந்தக்கீசகனைத் தன்னிருகைகளாலும் வலியப்) பிடித்தான்: பற்றிய பாணியால் - (தான்) பிடித்த கைகளினால், கறங்கு என எழ சுற்றினான்-காற்றாடிபோல (வானத்தின் மீதே) எழ(அந்தக்கீசகனை)க் கறகற வென்று சுழற்றினான்: தூணம் ஒன்றினோடு சென்னியை எற்றினான் - (ஆங்கிருந்ததொரு) கம்பத்தில் அவன் தலையை மோதினான்: நெடும் பெரு மூச்சன் ஆகி-மிகப்பெருமூச்சுடையனாய், (அவ் வீமன்), எடுத்த தன் வினை முற்றினான்-மேற்கொண்ட தன் செயலை நிறைவேற்றலானான்; (எ - று.) மேற்கொண்டசெயல் - கீசகவதம். இச்செய்யுளிற் பற்றினானென்றது - கீழ்ச்செய்யுளின் அனுவாதம். (125) 74.-வீமனைக் கீசகன்மாறிமோத வீமன் கீசகனைத் தள்ளிவீழ்த்துதல். வீமனைப்பிடித்தகைவிலக்கிமற்றவன் மாமுகத்திருகையுமாறிமோதினான் தீமுகத்தவனையச்செம்மன்மீளவும் சாமுகத்தவனெனத்தள்ளிவீழ்த்தினான். |
(இ -ள்.) வீமனை -, பிடித்த கை விலக்கி - (தன்னைப்) பற்றியுள்ள கைகளை விலக்கிவிட்டு, மற்று-பின்பு, அவன் - அந்தக் கீசகன், மா முகத்து - பெரிய (வீமனுடைய) முகத்திலே, இருகைஉம் - (தன்னுடைய) இரண்டு கைகளையும், மாறி - (முன்னையநிலை) மாறி, மோதினான் - தாக்கினான்: அ செம்மல்-செம்மைக்குணமுடையனாகிய அந்த வீமசேனன், தீ முகத்தவனை - தீமைக்கு இருப்பிடமான அந்தக்கீசகனை, மீளஉம் - மறுபடியும், சா முகத்தவன் என - (கண்டவர் யாவரும்) சாமூஞ்சிபட்டவன் (இவன்) என்று கருதுமாறு, தள்ளி-, வீழ்த்தினான் - விழச்செய்தான்; (எ - று.) வீமன்வீழ்த்தியதனால் கீசகனுக்கு முன்னிருந்த வீரப்பொலிவுமாறி, முகம்சாமூஞ்சிபட்டதென்க. (126) 75.-ஐந்து கவிகள் - வீமகீசகயுத்தம் கூறும். ஓரொருகுத்தொருவுருமுவீழ்ந்தென மேருவோடொத்ததோள்வீமன்குத்தலும் |
|