ஈரிடத்தினும்விலாவெலும்புநெக்கன கூருகிர்த்தலங்களாற்குருதிகக்கவே. |
(இ -ள்.) கூர் உகிர் தலங்களால் - கூரிய நகத்தோடு கைத்தலங்கள் பட்டதனால், குருதி கக்க - இரத்தத்தை வெளிப்படுத்துமாறு, ஓர் ஒரு குத்து- ஒவ்வொருகுத்தும், ஒரு உருமு வீழ்ந்தென - ஒருஇடி விழுந்தாற்போல வீழ, மேருவோடு ஒத்த தோள் - மேருவோடொத்த தோள்களையுடைய, வீமன்-, குத்தலும்-குத்தவே,-(கீசகனுக்கு), ஈர் இடத்தின்உம்- இரண்டுபுறத்தும், விலா எலும்பு-விலாப்புறமுள்ள எலும்புகள், நெக்கன-பிளந்து விண்டன; (எ-று.);- குத்தெரியுருமு என்றும், கூருகிர்த்தலைகளால் என்றும் பிரதிபேதம். (127) 76, | கேளொடுகெடுதரு கீசகன்கழல் தாளொடுதாளுறத்தாக்கிமற்கெழு தோளொடுதோளுறத்தோய்ந்துகன்னல்வில் வேளொடுவருநலம்விஞ்சமேவினான். |
(இ -ள்.) கேளொடு - சுற்றத்தாருடனே, கெடுதரு - அழியப்போகின்ற, கீசகன் - கீசகனானவன்,-கழல் தாளொடு-வீரக்கழலையணிந்த (வீமன்) பாதங்களுடனே, தாள் உற - (தன்) தாள்கள் பொருந்த, தாக்கி - மோதியும், மல் கெழு - வலிமை விளங்குகின்ற, தோளொடு - (தன்) தோளுடனே, தோள் - (வீமன்) தோள்கள், உற - பொருந்த, தோய்ந்து - படிந்தும், கன்னல் வில் வேளொடு வருநலம் விஞ்ச - கரும்புவில்லையேந்திய மன்மதனால் வருகிற இன்ப நலமும் விஞ்சும்படி, மேவினான்-(மற்போரினால்) தழுவினான்; (எ - று.) காமவின்பம் நுகர்கையில் தாளொடு தாளும் தோளொடு தோளும் தாக்கிப்பொருந்தல் நிகழு மாதலாலும் இந்த மற்போரிலும் அச்செயல் மிக நிகழ்தலாலும், 'வேளொடுவருநலம் விஞ்ச மேவினான்' என்றார்: இச்செய்யுளில் 'வேளொடு வருநலம் விஞ்ச மேவினான்' என்றது, வீமன் செயலை யென்றலும் ஒன்று. (128) 77. | தாழ்வரைத்தடக்கையாற்றையலாளெதிர் காழ்வரப்பொருதிறற்காளைதன்னையும் சூழ்வரச்சூறையிற்சுற்றிப்பார்மிசை வீழ்வரப்புடைத்தனன்மிடலில்விஞ்சினான். |
(இ -ள்.) மிடலில் விஞ்சினான்-வலிமையில் விஞ்சினவனாகிய கீசகன்,- வரை தாழ் தட கையால் - வரைபோன்றனவும் தொங்குவனவுமான பெரிய கைகளால், தையலாள் எதிர் - திரௌபதியின் எதிரிலே, காழ் வர - உறுதி பொருந்த, பொரு - போர்செய்கின்ற, திறல் - வல்லமையையுடைய, காளை தன்னைஉம் - இளவெருது போன்றவனான வீமனையும், சூறையின் - சுழல்காற்றிலகப்பட்டாற்போல, சூழ்வர சுற்றி - மண்டலமாகப் பொருந்தச் சுற்றி, பார்மிசை வீழ்வர - பூமியில் விழுமாறு, புடைத்தனன்-மோதினான்; (எ - று.) |