லிக்கொண்டே,- கண் வார் புனல் சோர - கண்களினின்று மிக்க நீர் பெருக,- (எ -று.)-'அல்லல்கூரவரற்றினள்' என்று கீழிற்கவியில் முடியும்.150) 99.-அதுகேட்டுப் பெரும்போர்புரிய வீமன் அங்கு விரைந்துஓடுதல். மடைப்பெரும்பள்ளியெய்தியமாருதி கிடைப்பதன்றிக்கிளர்பெரும்போரெனாத் தொடைப்பெரும்பவனத்தனல்சோர்தரப் புடைப்பவோடினன்போர்மதமாவனான். |
(இ -ள்.) போர் மதம் மா அனான்-போர்செய்யவல்ல மதக்களிறு போன்றவனான, பெரு மடைப்பள்ளி எய்திய மாருதி - பெரிய மடைப்பள்ளியைச் சேர்ந்திருந்த வீமன், 'இ கிளர் பெரும் போர் கிடைப்பது அன்று - இந்த உற்சாகத்துடன்செய்யத்தக்க பெரும்போரானது (எப்போதும்) கிடைக்கக் கூடியது அன்று,' எனா - என்று (போரைக் குறித்து) மகிழ்ச்சி கொண்டு, தொடை பெரும் பவனத்து-(விரைந்து செல்வதால்) தொடையினின்று வெளிப்படுகின்ற பெருங்காற்றிலே, அனல் சோர்தர புடைப்ப - நெருப்புத் தோன்றுமாறு (ஒருதுடையோடு மற்றொருதுடை) மோத, ஓடினன்-: (எ - று.) துடைகள் ஒன்றோடொன்று மோதிப் பெருங்காற்றை வெளிப்படுத்துவதால்அந்த அதிர்ச்சியில் நெருப்புத்தோன்றி மூளுவதாயிற்றென்க.துடைப்பரும்பவனத்துஎன்ற பாடத்துக்கு - அழித்தற்கு அரிய வீட்டினின்றும்,தான்செல்லும் விசையாலே, அனல்சோர்தர ஓடினான் என்பர். துடைப்பரும்புவனத்தினிற் சோர்தர என்றும் பாடம். (151) 100.-இரண்டுகவிகள்-வீமசேனன்மரங்களைக்கொண்டு உபகீசகர்களைத் துரத்திதுரத்தி யடித்து உயிர்தொலைத்ததை கூறும். அகப்பொழிற்கண்டவம்மரம்யாவையும் மிகப்பிடுங்கினன்வேரொடும்கோட்டொடும் உகப்புடைத்தனனோடத்தொடங்கினார் தகச்செயாமதிக்கீசகன்றம்பிமார். |
(இ -ள்.) அகப்பொழில்-சோலையினுட்புறத்தே, கண்ட-காணப்பட்ட, அ மரம் யாவைஉம் - அந்த மரங்களை யெல்லாம், வேரொடுஉம் கோட்டொடுஉம் - வேரோடும் கிளையோடும், மிக பிடுங்கினன் - மிகுதியாகப் பிடுங்கி,-உக - (அவ்வுபகீசகர்கள்) உயிர்சிந்துமாறு, புடைத்தனன் - மோதினான்; தக - தகுதியாக, செயா - (தொழில்களைச்) செய்யமாட்டாத, மதி - துர்ப்புத்தியையுடைய, கீசகன் தம்பிமார்-, -ஓட தொடங்கினார் - ஓட ஆரம்பித்தார்கள்; (எ - று.) திரௌபதியை உயிரோடு கொளுத்துவதென்று முயன்றவ ராதலால், அவர்களை 'தகச்செயாமதிக் கீசகன்தம்பிமார்' என்றார். பிடுங்கினான் - முற்றெச்சம். (152) |