தம்மையொப்பதொர்மகவையுந்தருகுவர் தவப்பயனெனப்பெற்ற இம்மறைப்பயனிம்மையிலுனக்குவந் தெய்தியதெனக்கூறி அம்முனிப்பெருங்கடவுளுந்தபோவன மடைந்தனனவளுந்தான் செம்மனத்தொடுபயின்றரமகளெனச் செல்வமாமனைசேர்ந்தாள். |
(இ-ள்.) (29) அ தபோநிதி - அந்தமுனிவன், பெரிது உவந்து - (பன்னிருமாதம் பிரதைசெய்த பணிவிடையால்) மிகவுஞ் சந்தோஷித்து, வருக என - வருவாயாக என்றுசொல்லி, பிரதை தன்னை - அந்தக் குந்தியைநோக்கி, 'எனது ஏவல் - என்னுடைய கட்டளையை, அரிது எனாது-, நீ-, இயற்றினை - செய்தாய்: நெடுங்கடல் அவனி மேல் யார் வல்லார் - (உன்னைப்போற் பணிவிடை செய்யப்) பெரிய கடலினாற் சூழப்பட்ட இந்தப்பூமியில் யாவர்வல்லார்? தெரிவை - பெண்ணே! கேள்-,' என - என்று, ஒரு மறை - ஒருவேதமந்திரத்தை, செவிப்படுத்து - (அந்தப் பிரதையின்) காதிலேயோதி, தேவரில் - தேவர்கட்குள்ளே, யார் யாரை-, கருதி-, 'நீ-, வர அழைத்தனை - (இந்த மந்திரத்தைச்சொல்லி) வருமாறு கூப்பிடுவாயோ, அவர் அவர் - அந்தந்தத் தேவர், கணத்து - ஒருகணப்போதில், நின் கரம் சேர்வார் - உன்கையைச் சேர்வார்கள் [உன்வசமாவார்கள்]; (30) (அன்றியும்) தம்மை ஒப்பது - தம்மையொத்துள்ளானாகிய, ஒர் மகவைஉம் - ஒருபுத்திரனையும், தருகுவர்- :(யான்), தவம் பயன்என பெற்ற - தவத்தின்பயனாகு மென்னுமாறு அரிதிலடைந்த, இ-இந்த, மறை-வேதத்தின், பயன்-, இம்மையில் - இப்பிறவியில்தானே, உனக்கு வந்து எய்தியது - உனக்கு வந்துசேர்ந்தது,' என கூறி - என்றுசொல்லி,- அ கடவுள் பெரு முனிஉம்- அந்தத் தெய்வத் தன்மையுள்ள பெருமுனிவரும், தபோவனம் - (தான்) தவம்புரியும் வனத்தை, அடைந்தனன்-; அவள்உம் - அந்தப்பிரதையும், தான்-, செம் மனத்தொடு - நல்ல மனத்தோடு, பயின்று - பொருந்தி, அரமகள் என - தெய்வமாதுபோல, செல்வம் மா மனை - (தனக்குரிய) செல்வமுள்ள சிறந்தமனையிலே, சேர்ந்தாள்-; (எ-று.) தன்தையின் மனையில் துருவாசமுனிவரை யுபசரித்து அம்முனிவரருளைப் பெற்ற குந்தி தனக்கென்றுள்ள செல்வமனையைச் சேர்ந்தாளென்க. (184,185) 31.-மறைப்பயனைக் காணக் கன்னிகை குந்தி நிலா முற்றத்திலே அம்மந்திரத்தைச் சூரியனைக்கருதி யுச்சரிக்க, அன்னான்அங்குவருதல். ததையும்வண்டிமிர்கருங்குழற்கன்னியத் தனிமறைப்பயன்காண்பான் சுதைநிலாவெழுமாளிகைத்தலத்திடைத் தூநிலாவெழுமுன்றில் இதையமாமலர்களிக்கநின்றன்பினோ டியம்பலுமெதிரோடி உதையபானுவுமலர்மிசையளியென வொருகணந்தனில்வந்தான். |
(இ-ள்.) ததையும் நெருங்கிய, வண்டு - வண்டுகள், இமிர் - ஒலிக்கின்ற, கருங்குழல் - கரிய கூந்தலையுடைய, கன்னி-, அ தனி மறை பயன் காண்பான் - அந்த ஒப்பற்ற வேதமந்திரத்தின் பயனை யறிய வேண்டி, சுதை நிலா எழு - (பூசிய) சுண்ணாம்பினால் வெண்ணிலாத் தோன்றுகின்ற, மாளிகை தலத்திடை- |