பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்105

     (இ-ள்.) உனை அளித்தவன் - உன்னைப்பெற்றவன், முனியும்- சினப்பான்,
என்று-, அஞ்சல் - பயப்படாதே: நீ-, உடன்படும் - சம்மதிக்கின்ற, உணர்வால் -
உணர்ச்சியோடு, நல் வினை அளித்தது என்று - நல்வினை (இவனைத்)
தந்ததென்றுகருதி, அணைதி ஏல் - (என்னைச்) சேர்வையானால், இன்பம்உம்-,
விழைவுஉறும்படி- (மனத்தில்) விருப்பமுண்டாகும்படி, துய்த்தி - நுகர்வாய்:
எனை அளித்த தொல் அதிதியின்-என்னைப்பெற்ற பழமையான அதிதிபோல,
உனக்கு-, இசை - புகழ், எய்தும் ஆறு - உண்டாகும்படி, இகல்
மைந்தன் தனைஉம் - வலிமையுள்ள மைந்தனையும், அளித்தி -
உண்டாக்குவாய்: மற்று - மேலும், (அந்தப்புதல்வன்), என்னின்உம் -
என்னைக்காட்டிலும், இரு நிலம் - பெருவுலகத்தாரால், தாள் தொழதக்கோன் -
தாளில் விழுதற்குரிய மேன்மையுடையவனாவன், (என்றும் கூறினான்); (எ -று.)

      'உனை யளித்தவன் முனியுமென்றஞ்சல்' என்பதற்கு - நீ
இப்போதிருப்பதுபோலவே கன்னிகையேயாய்விடுவாய் என்று கருத்துக்
காணலாம்: "ந கந்யகாபாவம் இமஞ்ச ஹாஸ்யஸி" என்று பாலபாரதத்தில்
வருவது காண்க: "சூரன தருளினாற் றுலங்கு கன்னிகையாகி" என்று இவரே
பின்னர்க் கூறுவர்.                                           (190)

36.-சூரியனது புகழ்ச்சியுரைகேட்டுப் பிரதை மலரணை
சேர்தல்.

ஆயிரங்கரத்திபதிபுகழ்ந்துநூ றாயிரமுகமாகப்
போயிரந்திவையுரைத்தபின்மதர்விழிப் புரிவுமூரலுநல்கி
வேயிருந்தடந்தோளிடந்துடித்திட மெல்லியன்மதன்வேதப்
பாயிரங்கொலென்றையுறவவனொடும் பனிமலரணைசேர்ந்தாள்.

     (இ-ள்.) ஆயிரம் கரத்து அதிபதி - ஆயிரங்கிரணங்களையுடைய
(ஒளிகட்கெல்லாம்) அதிபதியான சூரியன், நூறு ஆயிரம் முகம் ஆக புகழ்ந்து -
பலபாடியாகப் புகழ்ந்துகூறி, போய் இரந்து - மிகவும் இரந்து, இவை
உரைத்தபின் - இவ்வார்த்தைகளைக் கூறியபின்,- மெல்லியல் - அந்தப்பிரதை,
மதர் விழி பிரிவுஉம் - மதர்த்தகண்ணின் மூலமாக(த் தன்) விருப்பத்தையும்,
மூரல்உம் - புன்சிரிப்பையும், நல்கி - தந்து,- வேய் இருந் தட தோள் இடம்
துடித்திட - மூங்கில்போன்ற மிகப்பெரியதோள் இடப்புறந் துடிக்க,- 'மதன் வேதம்
பாயிரம் கொல் - மன்மத வேதத்தின் பாயிரமோ (இது)?' என்று-, ஐயுற - ஐயம்
மனத்திலுண்டாக, அவனொடுஉம் - அந்தச் சூரியனோடும், பனி மலர் அணை -
குளிர்ந்த புஷ்பசயனத்திலே, சேர்ந்தாள்-; (எ-று.)

     பாயிரமென்பது - நூற்குப் புறம்பானது; நூலுக்குத்தோற்றுவாயாவது.
மதன்வேதம் என்பது இங்கேயிலக்கணையால், காம சாஸ்திரத்திலுணர்த்தப்படும்
காரணங்களுக்கு ஆகுபெயர். இடந்துடித்தது. இனி விரைவிற்
புணர்வுநிகழுமென்பதைக் குறிப்பிப்பதாதலால். அது மதனவேதத்தின் பாயிரமென
ஐயுறத்தக்கதாயிற்று.                                              (191)

37.- புணர்ச்சியில் அவசமாகிய பிரதை பின் தன்வசமாக,
சூரியன் கரத்தலும் அவள் கருக்கொள்ளுதலும்.

தினகரன்சுடர்வடிவமுமமிர்தெழு திங்களின்வடிவாகத்
தனதடந்திருமார்புறத்தழீஇயபின் றையறன்னினைவெய்த