பக்கம் எண் :

122பாரதம்ஆதி பருவம்

நேரிடுமோ அல்லது நன்மை நேரிடுமா என்பதையும் கருதாதவளாய், - உதரம்
உள் குழம்பும் ஆறு கல்லால் செற்றனள்- (தன்) வயிறு உள்ளேகுழம்பும்வகை
(அவ்வயிற்றைக்) கல்லால் மோதினாள்; (எ-று.)

     நூறுமகவைக்கொண்ட கருப்பமாதலால் அப்பிண்டம் இரண்டு யாண்டு
சென்றும் கெட்டியாயிருக்கவே, குந்தி மகவைப்பெற்றதிற் பொறாமை கொண்டு
காந்தாரி கல்லால் வயிற்றை மோதிக்கொண்டனளென்க.             (225)

71.- காந்தாரியின்கரு பையோடு குருதிபொங்கப்பூமியில்
    விழ, வியாசன் சென்று அதனைக் காணுதல்.

மையறுசுபலன்கன்னி வயினிடைக்கருப்பஞ்சேரப்
பையொடுகுருதிபொங்கப் பார்மிசைவிழுந்ததாகச்
செய்யவன்விழுந்ததிக்கிற் செக்கர்வானென்னச்சென்று
மெய்யுடையரியகேள்வி வேள்விகூர்வியாதன்கண்டான்.

     (இ-ள்.) மை அறு சுபலன் கன்னி - குற்றமற்ற (கங்ந்தார தேசத்ததிபனான)
சுபல னென்பானுடைய பெண்ணின், வயினிடை - வயிற்றிலேயுள்ள, கருப்பம்-,
செய்யவன் விழுந்த திக்கில் செக்கர்வான் என்ன-சூரியன் அஸ்தமித்த திக்கிலே
செவ்வானந்தோன்றுவது போல, பையொடு - கருப்பப்பையுடனே, குருதி பொங்க
- இரத்தம்மேல் வழிய, பார்மிசை - பூமியின்மீது, சேர விழுந்தது ஆக -
ஒருசேரவிழுந்திட, சென்று - (கருப்பம் விழுந்த இடத்திலே) சென்று, மெய்உடை
அரிய கேள்வி வேள்வி கூர் - உண்மையையுடையவனும் அருமையான
கேள்வியையுடையவனுமாகி வேள்வியினான் மிக்கவனான, வியாதன் -
வியாசமுனிவன், கண்டான்-; (எ-று.)

     குருதிபொங்கவிழுந்த பைக்குச் செக்கர்வானம் உவமை; இவ்வுவமை
பாலபாரதத்திலும் வந்துள்ளது, இனி, செய்யவன் - சூரியனானவன், விழுந்த -
(தான்) விரும்பிய, திக்கில் - திக்கிலே, செக்கர்வான் என்ன - செக்கர்வானைக்
காண்பதுபோல, வியாதன் விழுந்த கருப்பையைக் கண்டான் என்றலும் ஒன்று.
                                                             (226)

72.- வியாசன் கோசத்தசையை நூறுகூறுசெய்து நெய்ந்
 நிரம்பிய நூறு கும்பங்களிலிட்டு, மிச்சமான மாமிசப்
 பகுதியை ஒருகலசப்பானையிலிட்டு வைத்தல்.

சஞ்சலமானகோசத் தசையினைத்தாழிதோறும்
எஞ்சலவாகநூறு கூறுசெய்திழுதிலேற்றி
நெஞ்சலர்கருணையாள னின்றவக்குறையுஞ்சேர்த்தி
அஞ்சில்வார்குழலியாகென் றாங்கொருகடத்தில்வைத்தான்.்

     (இ-ள்.) நெஞ்சு அலர் கருணை ஆளன் - நெஞ்சிலே நிரம்பிய
கருணையையுடைய வியாசன்,- சஞ்சலம் ஆன - குழம்பிப்போய்விட்ட, கோசம்
தசையினை - கருப்பையிலேயிருந்த மாமிசத்தை, எஞ்சல ஆக -
குறைதலில்லாதனவாக, நூறு கூறு செய்து - நூறு பாகமாகச் செய்து, தாழிதோறும்
- தாழிகளிலெல்லாமுள்ள, இழுதில் - நெய்யிலே, ஏற்றி-,- நின்ற அ குறைஉம் -
எஞ்சிநின்ற அந்தக் குறையும், அம் சில் வார் குழலி ஆக என்று - அழகிய
சில்லென்னும் அணியை