பக்கம் எண் :

சம்பவச் சருக்கம்123

யணிதற்குரிய நீண்ட கூந்தலைக்கொண்ட கன்னியாகுக என்று, ஆங்கு -
அங்குத்தானே, ஒருகடத்தில் - ஒருபானையிலே, சேர்த்தி வைத்தான் -
இட்டுவைத்தான்; (எ - று.)

     இதனால், இழுதைக் கொண்ட நூறு தாழியிலும் அந்தக்
கோசத்தசையினையிட்டமை பெறப்படும்.                            (227)

73.-வியாசன் காந்தாரியைநோக்கி 'என்வரத்தால் தசைகள்
உருவுபெற்று நிரம்பும்வரையிற்சேமித்துவை' என்று சொல்லிப்போதல்.
   

கருவுறுதாயைநோக்கிக் கையறுமென்றுகன்றி
வெருவுறல்கற்பின்மிக்காய் வேறுசெய்தசைகள்யாவும்
உருவுறநிரம்பித்தாமே யுற்பவிப்பளவுங்கையால்
மருவுறல்வழுவுறாதென் வரமெனவரதன்போனான்.

     (இ-ள்.) கரு உறு தாயை நோக்கி - கருவுற்ற தாயைப்பார்த்து,
கற்பின்மிக்காய்-! கையறும் - (நம்முடைய கருப்பம்) அழிந்திடும் என்று-, கன்றி
- மனம்வாடி, வெருவுறல் - அஞ்சாதே: வேறு செய் தசைகள் யாஉம் -
நூறுகூறுசெய்த தசைகளெல்லாம், உரு உற - ரூபத்தைப் பொருந்த, நிரம்பி -
பூர்ணமாகவளர்ந்து, தாம்ஏ உற்பவிப்பு அளவுஉம் - தாமே தோற்றுங்காலம்
வரையிலும், கையால் மருவு உறல் - கையால் (அத்தசைக் கூற்றைத்) தொடாதே:
என்வரம் வழுஉறாது - என்னுடையவரம் பழுதுபடாது, ' என - என்று சொல்லி
விட்டு, வரதன் - வரத்தைக் கொடுத்தவனான வியாசன், போனான்;

     தாழியிற்பெய்த தசைகள் உறுப்புநிரம்பித் தாமே அந்தத் தாழியைப்
பிளந்துகொண்டு வெளிவரும் வரையிற் பாதுகாப்பாயென்று சொல்லிச் சென்றனன்
வியாசனென்க. தாய் - காந்தாரி.                               (228)

74.-காந்தாரி தாழிகளிலிட்ட தசைக்கூறுகளைப் பாது
காத்து உற்பவிக்கும் பருவத்தை நோக்கியிருத்தல்.

காம்பெனநிறத்ததோளாள் கருவயிற்றிருப்பதொப்பத்
தேம்பயினறுநெய்பெய்த கலங்களைச்சேமமாக
ஆம்பரிவுடனேயாற்றி யீற்றிளையடைந்துவைகும்
பாம்பெனப்பருவநோக்கி யிருந்தனள் பழுதிலாதாள்.

     (இ-ள்.) பழுது இலாதாள் - குற்றமற்றவளான, காம்பு என நிறத்த
தோளாள்-பசியமூங்கில்போலவுள்ள நிறத்தையுடைய தோளையுடையவளான
காந்தாரி, கரு - கருப்பம், வயிறு இருப்பது ஒப்ப - (தன்) வயிற்றில்தானே
இருப்பதையொப்ப, தேம் பயில் நறு நெய் பெய்த கலங்களை - இனிமை
பொருந்திய நறுமணமுள்ளநெய் யூற்றிய கலங்களை, சேமம் ஆக - பத்திரமாக,
ஆம் பரிவுடன் ஆற்றி - பொருந்திய மனப்பரிவோடு பாதுகாத்து,- ஈற்று அளை
அடைந்து வைகும் - ஈன்றமுட்டையைக்கொண்ட புற்றையடைந்து தங்குகின்ற,
பாம்பு என - பாம்புபோல, பருவம் நோக்கி இருந்தனள்-; (எ-று.)

     உவமையாற் கொடுமை தொனிக்கும். ஈற்று - ஈனப்பட்டது:
செயப்படுபொருள் விகுதி புணர்ந்துகெட்டுத் திரிந்த பெயர்.         (229)