(இ-ள்.) அனசநிருபன் புதல்வர் ஐவர்உம் - (திருதராட்டிரனுடைய) தம்பியான பாண்டுமன்னவனுடைய புத்திரர் ஐந்து பேரும், மகீபன் தனயர் ஒரு நூற்றுவர்உம் - திருதராட்டிர மன்னவனுடைய புத்திரர் நூறுபேரும்,- அன்பினொடு தழுவி - அன்போடு தழுவிக்கொண்டு,- கன குலம் முகந்து பெய் - மேகக்கூட்டம் (கடலில்) முகந்துகொண்டு பெய்வதனால் நிறைகின்ற, கருங் கயம் - பெரிய நீர்நிலையிலே, நெருங்கும் - நெருங்கியுள்ள, வனச மலர்உம் குமுதமலர் உம் என - தாமரைமலரும் ஆம்பல்மலரும்போல, வளர்வார் வளர்பவராயினர்; (எ-று.) சிறந்துதோன்றும் தாமரைமலர் பாண்டவர்க்கும், குமுதமலர் துரியோதனாதியர்க்கும் உவமை. (265) வேறு. 111.- இதுவும் அடுத்தகவியும் - ஒருதொடர்: வசுதேவன் முதலியோர் அத்தினாபுரிக்கு வருதலைத் தெரிவிக்கும். இன்னணம் வளருங் காலை யெறிகட லுடுத்த வல்குல் மின்னெனு மருங்குல் கொங்கை வெற்புடை வேய்கொண் மென்[றோள் பொன்னெனு நிறத்தி னோடும் பொற்பழி யாகு லத்தாள் தன்னெண முடிப்பான் வந்த தலைவனைத் தந்த கோமான். |
(இ-ள்.) இன்னணம் - இவ்வாறு, வளரும்காலை - (பாண்டவரும் துரியோதனாதியரும்) வளராநிற்கையில்,- எறி கடல் உடுத்தஅல்குல் - அலைவீசுகின்ற கடலை உடையாகச் சுற்றியுள்ள நிதம்பதேசத்தையும், மின் எனும் மருங்குல் - மின்னலென்னும் இடையையும், வெற்பு கொங்கை - வெற்பாகிய கொங்கையையும், வேய்கொள் மெல்தோள் - மூங்கிலினாற்கொண்ட மெல்லியதோளையும், உடை - உடைய, பொன் எனும் நிறத்தினோடு பொற்புஉம் அழி - பொன்னெனத்தக்க நிறுத்தினோடு தன் அழகும் அழிந்ததனால், ஆகுலத்தாள் தன் - துன்பமடைந்தவளான பூமிதேவியினுடைய, எ(ண்)ணம் - (பாரந்தீர்க்கவேண்டுமென்று கருதிய) எண்ணத்தை, முடிப்பான் - முடிப்பதன்பொருட்டே, வந்த - (பூமியிலே) அவதரித்தவனாகிய, தலைவனை - தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை, தந்த - பெற்ற, கோமான் - தலைவனாகிய வசுதேவனும்,- (எ-று.)- இச்செய்யுளில் 'வளருங்காலை' என்பது, அடுத்தசெய்யுளில் 'அத்தினாபுரிவந்துற்றார்' என்பதனோடு இயையும். இதுமுதல் எட்டுக்கவிகள்- இச்சருக்கத்து 67 - ஆங் கவி போன்ற அறுசீராசிரிய விருத்தங்கள். (266) 112. | குந்திபோசன்றன்றெய்வக் குலத்துளோர்களுமநேக விந்திரரவனிதன்னி லெய்தினராகுமென்னக் கந்தவான்கொன்றைதோயுங் கங்கையாள்குமரன்வைகும் அந்தமில்சுவர்க்கமன்ன வத்தினாபுரிவந்துற்றார். |
(இ-ள்.) குந்திபோசன் தன் தெய்வம் குலத்துஉளோர்கள் உம் - குந்திபோசனும் அவனுடையசிறப்புற்ற குலத்துத்தோன்றியவர்களும், அனேக இந்திரர் - அனேக இந்திரர்கள், அவனிதன்னில் - பூமியிலே, எய்தினர் - வந்துள்ளார், என்ன - என்று சொல்லு |