தலும், மாலையில் விளக்கு எடுத்தலும் இயல்பு. இராசகுமாரனான துரியோதனன் நகர்க்கு மீளுகையில் அங்குள்ளார் அவனுக்கு மரியாதையாக மங்களசங்கத்தை முழக்குதலும், அஷ்டமங்கலத்துள் ஒன்றான விளக்கை ஏந்துதலும் இயல்பே. (292) 19.- வீமனைக் காணாது குந்தி மிகவருந்துதல். கண்டிலளுதிட்டிரன் கனிட்டற்கண்ணுற உண்டிலடரித்தில ளோரிராவினும் கொண்டிலடுயிலிளங் குமரர்தம்மொடும் விண்டிலளுரையுளம் விம்முகுந்தியே. |
(இ-ள்.) உதிட்டிரன் கனிட்டன் - தருமபுத்திரனது தம்பியான வீமனை, கண் உற கண்டிலள்- (தன்) எதிரில்வரக் காணாதவளாய் உளம் விம்மு - மனம் ஏங்குகிற, குந்தி - குந்திதேவியானவள், - உண்டிலள் - உணவு நுதர்ந்திலள்: தரித்திலள்- (மகப்பிரிவினாலான துன்பத்தைச்) சிறிதும் பொறுக்கமாட்டிற்றிலள்; ஓர் இராவின்உம்-(அவனைக்காணாத தினங்களுள்) ஓரிரவிலாயினும், துயில் கொண்டிலள்-நித்திரைகொண்டிலள்; இள குமரர்தம்மொடுஉம் உரை விண்டிலள் - இளமைப்பருமுடைய (தனதுமற்றைக்) குமாரர்களுடனும் யாதொரு பேச்சும் பேசிற்றிலள்; (எ-று) (293) 20.-தருமன் முதலிய நால்வரும் வீமனைத் தேடிக்காணாது வருந்துதல். வீடினனாமெனத் துணைவர்வேறுவேறு ஓடினர்கானதி யோடையெங்கணும் தேடினர்காண்கிலஞ் செய்வதென்னென நாடினர்நடுங்கினர் நடுக்கில்சிந்தையார். |
(இ - ள்.) நடுக்கு இல் சிந்தையார் - கலக்கமற்ற மனத்தை யுடையவர்களான, துணைவர் - (யுதிட்டிரன் முதலிய) உடன்பிறந்த நால்வரும், வேறுவேறு ஓடினர் - வெவ்வேறாய் ஓடிச்சென்று, கான் நதி ஓடை எங்கண்உம் தேடினர் - காடு நதி ஓடை ஆகிய எவ்விடங்களிலுந் தேடி, காண்கிலம் செய்வது என் என நாடினர் - '(எங்குங்) காண்கின்றிலோம்: இனிச்செய்யக்கடவதுஎன்ன!' என்று சிந்தித்து, வீடினன் ஆம் என (வீமன்) இறந்தான் போலுமென்று சங்கித்து, நடுங்கினர் - மிகவும் அஞ்சினார்கள்;(எ-று.) "காநநேஷு ஸரஸீஷு ஸிந்துஷு " என்று பாலபாரதத்தில் வருதற்கு ஏற்ப, கான் - காட்டில் எனப்பட்டது. (294) 21.- தருமன் முதலியோர் சிந்தைப்படும் விதம். கூற்றனசுயோதன குமரனேயிவன் ஆற்றலின்வெரீஇயழுக் கற்றசிந்தையான் ஏற்றதையுணர்கில மென்றுதந்தையாம் காற்றினுமலமருங் கருத்தராயினார். |
(இ-ள்.) 'கூற்று அன - யமனையொத்த, சுயோதன குமரன்ஏ - துரியோதனனாகிய இராசகுமாரனே, இவன் ஆற்றலின் வெரீஇ - |