பக்கம் எண் :

குருகுலச் சருக்கம்17

  17.- அந்த யயாதி சுக்கிராசாரியர்புதல்வியைமணந்து இருபுதல்வரைப்
பெறுதல்.

யயாதியென்றுகொண்டிவனையே யெவரினுஞ்சிறக்க
வியாதனும்புகழ்ந்துரைத்தது மற்றிவன்மேனாள்
புயாசலங்களுக்கிசையவே புகரவன்புதல்வி
குயாசலந்தழீஇயிருவர்வெங் குமரரையளித்தான்.

     (இ - ள்.) இவனைஏ - இந்த நகுடனது புத்திரனையே, யயாதி
என்றுகொண்டு -யயாதியென்றுபாராட்டிக்கொண்டு, எவரின்உம் சிறக்க -
யாவரினும்மேன்மைபெறும்படி, வியாதன்உம் - வியாசமகரிஷியும், புகழ்ந்து
உரைத்தது - புகழ்ந்துகூறியது: மேல்நாள் - முற்காலத்தில், இவன் - இந்தயயாதி,
புய அசலங்களுக்குஇசைய - (தன்னுடைய)  மலைபோன்ற புஜங்களுக்குஏற்க,
புகரவன் புதல்வி -சுக்கிராசார்யருடைய புத்திரியின், - குய அசலம் தழீஇ -
மலைபோன்ற தனங்களைத்தழுவி, வெம் குமரர் இருவரை - கொடுங்குணமுடைய
இரண்டு புத்திரர்களை,அளித்தான்-; (எ -று.)

     புயாசலங்களுக்குஇசையக் குயாசலந் தழுவினா னென்று நயம் காண்க:
மலையோடு மலை சேர்த லியல்பாதல் அறிக. யயாதியின் உபாக்கியானம்
வியாசபாரதத்து விரிவாகக் கூறப்பட்டிருத்தலால், யயாதியென்றுகொண்டு
வியாதனும்புகழ்ந்துரைத்தது இவனையே யென்றார். புகரவன் புதல்வியின் பெயர்,
தேவயாநீயென்பது. இருவர்குமரர் - யது துருவசுஎனப்படுவர்.
வெங்குமரரென்றது- இவர்கள்தந்தைசொல்லைக்கேளாதவராதலால்; இத்தன்மை,
மேல் இருபத்துமூன்றாங் கவியில்விளங்கும். மற்று - அசை.             (25)

18.- இதுவும் அடுத்த கவியும் - தேவயானைக்குப் பணிப்பெண்ணும்
விடபன்மனென்னும் அசுரமன்னன்மகளுமான சன்மிட்டையை, யயாதி,
கந்தருவமணத்தாற் சேர்ந்தமை கூறும்.

அன்னகாலையிலிவடன தாருயிர்த்துணையாய்
முன்னிசைந்தபேரிசைவினா லேவலின்முயல்வாள்
நன்னிலந்திகழ்கவிதனக் குரைகெழுநண்பாம்
மன்னவன்றருமடவர லிவனுழைவந்தாள்.

     (இ - ள்.) அன்ன காலையில் - அக்காலத்தில், இவள் தனது - இந்தத்
தேவயானையின், ஆர்உயிர்துணை ஆய் - அரியஉயிர்த்தோழியாய், முன்
இசைந்தபேர் இசைவினால் ஏவலின் முயல்வாள் - முன்னம் உடன்பட்ட மிக்க
உடன்பாட்டின்படியே (அந்தத்தேவயானையின்) ஏவலைமுயன்றுசெய்பவளான, நல்
நலம் திகழ் கவி தனக்கு உரை கெழு நண்பு ஆம் மன்னவன் தரும் மடவரல் -
மிக்கநற்குணத்தால் விளங்குகின்ற சுக்கிராசாரியனுக்குப் புகழ்ந்து கூறப்படும்
நண்பனான(வ்ருஷபர்வனென்ற) அசுரமன்னவன் பெற்ற பெண், இவனுழை -
இந்தயயாதியினிடத்து, வந்தாள்-; (எ - று.)

     சன்மிட்டையென்பவள் - அசுரகுருவான சுக்கிராசார்யர்க்கு நண்பனான
வ்ருஷபர்வன்மகள்: சுக்கிராசார்யரின்புத்திரி தேவ