வர்களான, உபயாசன் யாசன் எனும்பேர் இருவோர்உம் - உபயாசனென்றும் யாசனென்றும் பெயரையுடைய இரண்டுமுனிவர்களும், கூறும் முறையின் சடங்கு இயற்றி- (வேதசாஸ்திரங்களிற்) கூறப்பட்ட விதி முறைப்படிஉரிய சடங்குகளைச் செய்து, கோவின் வழக்கம் பெரு வேள்ளி - அரசர்க்குஉரிய வழக்கமாகிய பெரியபுத்திரகாமயாகத்தை, நூறு மகத்தோன் நிகர் அரசை - நூறு அசுவமேதயாகங்களைச் செய்தவனான தேவேந்திரனைப் போன்ற யாகசேனராசனை, நோன்மைக்கு இசைய புரிவித்தார் - அவன் பெருமைக்குத் தக்கபடி [மிகச் சிறப்பாகச்] செய்வித்தார்கள்; (எ -று.) கங்காதீரத்திலுள்ள அந்தணர் பலர் வசிக்கும் இடத்தில் யாஜன் உபயாஜன் என்ற இரண்டு பிரமவிருடிகள் தவவொழுக்கத்திற் சிறந்து இருந்தனரென்றும், அவர்களுள் மூத்தவனான யாஜன் தலைவனாய் நின்று, இளையவனான உபயாஜனைப் புரோகிதனாகக் கொண்டு, யாகஞ்செய்வித்தன னென்றும் முதனூலால் விளங்கும். சடங்கு என்பது - ஷடங்க மென்னும் வடசொல்லின் விகார மென்றும், (வேதத்தின்) ஆறு அங்கங்களிற்கூறிய முறைக்கு ஏற்பச் செய்யப்படுந் தொழிலென்று ஏதுப்பொருள் படுமென்றுங்கூறுவர். (359) 86.- உபயாசன் புத்திரகாமயாகத்தை முடித்தல். புரிந்தமகப்பேற்றழல்வேள்விப் பொன்றாவோமப்பொருண்மிச்சில் பரிந்துவிபுதரமுதேய்ப்பப் பைம்பொற்கலத்தினிறைத்தாங்குத் தெரிந்தமணிப்பூணவன்றேவிக் களிக்கத்தீண்டாளாகியபின் சொரிந்துகனலினுபயாச னிமைப்பிற்சுதனைத்தோற்றுவித்தான். |
(இ-ள்.) புரிந்த - இவ்வாறுசெய்த, மகப்பேறு வேள்வி - புத்திரகாம யாகத்தில், அழல்ஓமம் - அக்கினியில் ஓமஞ்செய்த, பொன்றா பொருள் - குறைபாடில்லாத பொருளினது [ஹவிஸ்என்னும் தேவருணவினது], மிச்சில் - சேஷத்தை, விபுதர் அமுது ஏய்ப்ப - தேவாமிருதத்தைப்போல, பைம்பொன் கலத்தின் நிறைத்து - பசிய பொன்னினாலாகிய பாத்திரத்திலேவைத்து, ஆங்கு - அப்பொழுது, தெரிந்த மணி பூணவன் தேவிக்கு பரிந்து அளிக்க - தேர்ந்தெடுத்த இரத்தினாபரணங்களை யணிந்த அவ்யாகசேனராசனது மனையாளுக்கு அன்போடு கொடுக்கப்புக, தீண்டாள் ஆகிய பின் - (அவள் அதனைச் செருக்கினால்) வாங்கிக்கொள்ளாதவளாக அதன் பின்பு, உபயாசன்-, கனலின் சொரிந்து - (சேடித்த அந்த ஹவிஸையும்)அக்கினியிலே ஆகுதிசெய்து, (அதனால்), இமைப்பில் - ஒரு நொடிப்பொழுதிலே, சுதனை தோற்றுவித்தான் - புத்திரனைப் பிறப்பித்தான்; (எ-று.) ஓமசேடத்தைக் கொடுக்குஞ்சமயத்தில் அரசன்மனைவி செருக்குக்கொண்டு அவனை வாங்கியுண்ணுதற்கு மறுக்க, முனிவன் மந்திரசுத்தமான அந்த ஹவிசை அனலிற்பெய்து அங்குநின்று மகனை யுண்டாக்கலானா னென்க. முதனூலிற்குஏற்ப, இவ்வாறு பொருள்கொள்ளப்பட்டது. பாலபாரதத்தும் இவ்வாறே உள்ளது. இச்செயலை யாஜன்செய்ததாகமுதனூல்கூறுகின்றது. தீண்டாள் |