இதுவும், அடுத்த கவியும் - குளகம். (இ-ள்.) பூதி நலம் திகழ் - செல்வமும் மற்றைநன்மையும் விளங்கப்பெற்ற, பூரு - பூருவென்னும் அரசனது, குலத்திற்கு - வமிசத்திற்கு, ஆதிபன் ஆகி - தலைவனாய், அனங்கனை வென்றோன் - (பெண்ணாசையை ஒழித்ததனால்) மன்மதனை வென்றவனான வீடுமன்,நுண் நூல் ஓதிய - நுட்பமாகச் சாஸ்திரங்களைக் கற்றறிந்த, கேள்வி - நூற்கேள்விகளையுமுடைய, உதிட்டிரன் - தருமபுத்திரன், நீதியினால்உம் நிறைந்தனன் - நீதியாலும் நிறைந்தவன், என்னா - என்று எண்ணி,- (எ-று.)- 'அளித்தான்' என வருங் கவியில் முடியும். பூதி - ஐசுவரியம்: வடசொல். தன் தந்தை மகிழ்ந்து அளித்த வரத்தின்படி அரசாட்சிச்செல்வத்துக்குத் தலைமைபூண்டதனால், பூரு, 'பூதி நலந்திகழ் பூரு' எனப்பட்டான். இதுமுதல் பதினான்கு கவிகள் - பெரும்பாலும் நான்காஞ்சீரொன்று மாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள். (369) 96.- வீடுமன் தருமபுத்திரனுக்கு இளவரசு முடி சூட்டுதல். மைந்தருடன்செயல் வழுவறவெண்ணிக் குந்திபயந்தருள் குரிசிலையிவனே இந்தநிலக்கினி யிளவரசென்றாங்கு அந்தண்மதிக்குடை முடியொடளித்தான். |
(இ-ள்.) மைந்தருடன் - (உடன்பிறந்தவனது) மக்களாகிய திருதராட்டிரன் விதுரன் என்பவர்களோடு, செயல் வழு அற எண்ணி - செய்யவேண்டிய காரியத்தைத் தவறில்லாதபடி ஆலோசித்து,- குந்தி பயந்தருள் குரிசிலை - குந்தி அன்போடுபெற்ற தலைப்பிள்ளையான தருமனை (நோக்கி), இவன் ஏ இனி இந்த நிலக்கு இளவரசு என்று-, ஆங்கு - அப்பொழுது, அம் தண் மதி குடை முடியொடு அளித்தான் - அழகியகுளிர்ந்த பூரணசந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையும் கிரீடத்தையும் கொடுத்தான்; (எ-று.)- ஆங்கு - அசையுமாம். நிலக்கு என்றதில், அத்துச் சாரியை தொக்கது. (370) 97.- தருமபுத்திரன் குடையும் முடியும் பெற்று விளங்குதல். சந்தனுவின்றிரு மரபுதயங்கச் செந்திருமேவரு சிறுவனுமப்போது இந்துவொடாதப னிருவருமன்பால் வந்துதழீஇமெய் வயங்கினனொத்தான். |
(இ-ள்.) சந்தனுவின் திரு மரபு தயங்க - சந்தனுவினது மேன்மையான குலம் விளங்க, செந் திரு மேவரு - செந்நிறமுடைய திருமகளோடு[இளவரசாட்சிச்செல்வத்தோடு] கூடிய, சிறுவன் உம் - இராசகுமாரனான தருமபுத்திரனும்,- அப்போது-, இந்துவொடு ஆதபன் இருவர்உம் அன்பால் வந்து தழீஇ மெய் வயங்கினன் ஒத்தான் - (குடையையும் முடியையும் பெற்றதனால்) சந்திரனும் சூரியனுமாகிய இருவராலும் அன்போடு வந்து தழுவப் பெற்று மேனி விளங்குபவன் போன்றான்; (எ-று.) |