பக்கம் எண் :

வாரணாவதச் சருக்கம்205

105.ஒருதிறனிந்நக ருறைதரினொன்றாது
இருதிறன்மைந்தரு மிகலுவர்மேன்மேல்
அருகணுகாவகை யகலவிருந்தால்
மருவுறுநண்பு வளர்ந்திடுமென்றே.

     (இ-ள்.) இரு திறன் மைந்தர்உம் - (துரியோதனாதியரும் பாண்டவருமாகிய)
இரண்டு வகைப் புதல்வர்களும், இ நகர் - இந்த நகரத்தில், ஒரு திறன்
உறைதரின் - ஒருசேர வசித்தால், ஒன்றாது - ஒற்றுமைப்படாமல், மேல்மேல்
இகலுவர் - மேலும்மேலும் பகைமை கொள்வார்கள்; அருகு அணுகாவகை -
(ஒருதிறத்தாரோடு மற்றொரு திறத்தார்) சமீபத்தில் நெருங்காதபடி, அகல
இருந்தால்- (இரு திறத்தாரும்) தூரத்தில் வெவ்வேறாக இருந்தால், மருவுறும்
நண்பு வளர்ந்திடும் - மனங்கலக்கிற சினேகம் (அவர்கட்குள்) வளரும், என்று-,-
(எ-று.)- 'கூறலும்' என வருங்கவியோடு தொடரும்.

      'சேரவிருப்பிற் செடியும்பகை', 'அகலவிருக்கிற் பகையும் உறவாம்' என்பன
- பழமொழிகள். ஒருதிறலென்றும் பாடம்.                           (379)

106.- அதற்கு அவர்கள் கூறும் விடை.

இம்மொழிகூறலு மிருவருமெண்ணித்
தெம்முறையாயினர் சிறுபருவத்தே
எம்முரைகொள்கல ரினியவர்மதியேது
அம்மதியேமதி யாகுவதென்றார்.

     (இ-ள்.) இ மொழி கூறலும் - இந்த வார்த்தையை (த் திருதராட்டிரன்)
சொன்னவளவிலே,- இருவர்உம்- (விதுரன் வீடுமன் என்ற) இரண்டுபேரும்,
எண்ணி - ஆலோசித்து,- 'சிறு பருவத்து ஏ தெவ் முறை ஆயினர் -
(துரியோதனாதியர்கள்) இளம்பிராயத்திலேயே பகைத்தன்மை கொண்டிட்டார்கள்;
எம் உரை கொள்கலர் - எங்கள் வார்த்தையைக்கேட்டு நடக்கமாட்டார்கள்: இனி
- இனிமேல், அவர் மதி ஏது அ மதிஏ மதி ஆகுவது - அவர்களறிவு எதுவோ
அந்த அறிவே (அவர்கட்கு உரிய) அறிவாவது', என்றார்-; (எ-று.)

      'எம்முறைகேளார்' என்றபாடத்துக்கு - நாங்கள் சொல்லும் நீதி
முறைகளைக் கேட்கமாட்டார்களென்று பொருளாம். தெவ் + முறை = தெம்முறை:
"தெவ்வென்மொழியே தொழிற்பெயரற்றே, மவ்வரின் வஃகான்
மவ்வுமாகும்."அவர்மதிஏது அம்மதியே ஆகுவது: (இதனை நீ) மதி என்றுமாம்.                                                              (380)

107.-பின்பு திருதராட்டிரன் புரோசனனென்னும்
 மந்திரியை வருவித்தல்.

விதுரனும்வார்கழல் வீடுமனுந்தம்
இதயநிகழ்ந்த தியம்பியபின்னர்ப்
பொதுமையிலாத புரோசனனென்னும்
மதியுடைமந்திரி வருகெனவந்தான்.

     (இ-ள்.) விதுரனும்-, வார் கழல் - நீண்ட வீரக்கழலையுடைய வீடுமனும்-,
தம் இதயம் நிகழ்ந்தது இயம்பிய பின்னர் - தங்கள் மனத்தில் தோன்றிய
கருத்தைச்சொன்னபின்பு, (திருதராட்டிரன்),- பொதுமை இலாத புரோசனன்
என்னும் மதி உடை மந்