அச்சமற்றிவனம்மனைக் கம்மனைவழங்கும் நிச்சமின்றுகொலென்றுகொலெனநினைந்திருந்தான். |
(இ-ள்.) (வீமன்), தச்சரில் பெருந் தலைவனுக்கு - (இவ்வாறு உய்யும்வழி கூறிய) சிறந்த அச்சிற்பிக்கு, உரிமையின் - தகுதியினால், தனங்கள் - செல்வங்களை, பிச்சரின் கொடுத்து - பித்தர்போலத் தலைதெரியாது (மிகுதியாகக்) கொடுத்து,- அவன் விடை கொண்டதன் பின்னர் - அச்சிற்பி விடைபெற்றுக்கொண்டு சென்றபின்பு,- அச்சம் அற்று - பயம் ஒழிந்து,- 'இவன் - இப்புரோசனன், நம் மனைக்கு அம்மனை வழங்கும் - நாம் வசிக்கும் இந்த மாளிகையில் அக்கினியை வைப்பான்: நிச்சம் - (இது) நிச்சயம்: இன்று கொல் என்று கொல் (இது செய்யும் நாள்) இன்றைக்கோ என்றைக்கோ? ' என நினைந்துஇருந்தான் - என்று எண்ணிக்கொண்டு கவனிப்புடன் இருந்தான்; (எ-று.) தச்சர் - இச்சிறப்புப்பெயர், சிற்பிகளென்றபொருளில் வந்தது. அம் மனைக்கு - நெருப்பிற்கு, அ மனை - அந்த மாளிகையை, வழங்கும் - ஒப்பிப்பான் என்று கூறுதலும் ஒன்று. அம்மனையென்பது- (அம் - நீர், மனை - இடம்) நீர் பிறத்தற்குக் காரணமாயுள்ளதென்ற பொருளால், நெருப்பிற்குவந்ததோர் ஏதுப்பெயராம்; நெருப்பினின்று நீர் தோன்றியதென வேதமுங் கூறும். (399) 126.-பாண்டவர் பகலில் வேட்டையாடி இரவில் விழிப்புடன் இருத்தல். விடவிவன்சினைநெடுங்கொடி தழுவலின்மிடைந்த அடவியெங்கணும்வேட்டையாற் றங்கள்பேராண்மை நடவிநன்பகலிரவுகண் டுயிலலர்நடந்தார் புடவிதங்கள்வெண்குடைநிழற் குளிருமாபுரப்போர். |
(இ - ள்.) தங்கள் வெள் குடை நிழல் - தங்கள் வெண்கொற்றக் குடையின் நிழலினால், புவி குளிரும் ஆ - பூமிமுழுவதுங்குளிர்ச்சியடையும்படி, புரப்போர் - பாதுகாக்கவல்லவரான பாண்டவர்கள்,- நல் பகல் - நல்ல பகற் காலத்தில், விடவி வல் சினை நெடுகொடி தழுவலின் மிடைந்த அடவி எங்கண்உம் - மரங்களின்வலிய கிளைகளிலே நீண்டகொடிகள் தழுவிப்படர்தலால், அடர்ந்துள்ள காடு முழுவதிலும், வேட்டையால் - வேட்டையாடுதலால், தங்கள்போர் ஆண்மை நடவி - தங்களுடைய சிறந்த ஆண்தன்மையை [பல பராக்கிரமங்களை]ப் பரவச்செய்து, இரவு - இராத்திரியில், கண்துயிலலர் நடந்தார் - கண்மூடி யுறங்காதவர்களாய் ஒழுகினார்கள்; (எ-று.) வேட்டையென்ற வியாஜத்தினாற் பகலையும், கண்விழிப்பினால் இரவையும் போக்கினார் பாண்டவரென்க: இங்ஙன் இவர் செய்தது, எக்காலத்துப் புரோசனனால் தீங்குவிளையுமோ என்ற அச்சத்தினாலாகும் விடவி= விடபீ: விடபம் - கிளை: அதனையுடையது விடபீ. பெண்பாலாகிய கொடி ஆண்பாலாகிய மரத்தின்கிளையைக் கொள் கொம்பாகக் கொண்டு தழுவும் இயல்பை முதலடிவிளக்கும். 'துயிலற' என்றும் பாடம் உண்டு. (400) 127.- சிலகாலம் புரோசனனுடன் பாண்டவர் வசித்தல். பரந்தளோடொருமனைவயற் பயில்பவர்போல வேந்தரைவருமந்திர வலியானான்மிக்கோர். |
|