பக்கம் எண் :

218பாரதம்ஆதி பருவம்

சோகக்கண்ணீர்ப்பெருக்கின் மிகுதியைக்கூறியவாறு. வேடர் ஐவரும் அவர்கள்
தாயும் எரிந்துகிடந்ததைக்கண்டு பாண்டவரைவரும் குந்தியும் எரிந்து கிடந்தன
ரென்று கருதின ரென்க; அத்தன்மை, அடுத்த கவியில் விளங்கும்.
இறந்தனரென்ற பொருளில் 'வீழ்ந்தனர்' என்றது, மங்கலவழக்கு. இரண்டாம்
அடிக்கு - நெருப்பு மாளிகையைச் சுட்டதன்றி, மீண்டும் இரங்கிய தம்மனத்தைச்
சுட என்று நயந்தோன்றக்கூறினார்.                             (406)

133.- இச்செய்தியறிந்து அரசர்கள்பலரும் வருந்துதல்.

விருத்தராய்விடமிடச்செலைவேடருந்தாயும்
இருந்ததீமதியமைச்சனோ டிறந்தமையுணரார்
திருந்துமாமதிப்பாண்டவர் செயலுமற்றறியார்
வருந்தினார்தமதுயிரிழந் தெனப்புவிமன்னர்.

     (இ-ள்.) புவி மன்னர் - பூமியிலுள்ள அரசர்கள்,- விருந்தர் ஆய் விடம்
இட செல் - புதியவர்களாய் (த் துரியோதனன் கட்டளையின்படி பாண்டவர்க்கு)
விஷங்கொடுக்க வந்த, ஐ வேடர்உம் - ஐந்து வேடர்களும், தாய்உம் -
(அவர்கள்) தாயான வேட்டுவச்சியும், இருந்த தீ மதி அமைச்சனோடு -
(முன்னமே அங்கு) இருந்த துர்ப்புத்தியுடைய மந்திரியாகிய புரோசனனுடனே,
இறந்தமை - மரித்ததை. உணரார் - அறியாவர்களாய்,- மற்று -மற்றும், திருந்து
மா மதி பாண்டவர் செயல்உம் அறியார் - திருத்தமுற்ற சிறந்த அறிவையுடைய
பாண்டவரது செய்கையும் அறியாதவர்களாய், - தமது உயிர் இழந்து என
வருந்தினார் - (பாண்டவரை யிழந்தோ மென்றே கருதியதனால்) தமது உயிரை
யிழந்தாற்போல வருந்தினார்கள்;

     பாண்டவர்க்கு விஷங்கலந்த தேனைக் கொடுத்துக் கொல்லும் படி
துரியோதனனால் அனுப்பப்பட்ட ஐந்து வேடர்களும் அவர்கள் தாயும் அன்று
அங்கு வந்திருந்து தீயின்வாய்ப்பட்டு இறந்தன ரென்பதை இதனால் அறிக.
விருந்தர் = விருந்தினர். மற்று - வினை மாற்றுமாம். பாண்டவர்செயல் -
அரக்குமாயிகையைத் தீக்கொளுவித் தப்பிச்சென்று உய்ந்தமை       (407)

134. இச்செய்தியறிந்த முனிவர்கள் முதலியோர் வருத்தம்.

போதுபட்டிருள் புகுந்தொளி போனவானகம்போன்
மாதுபட்டபார்மடந்தைதன் மதிமுகமழுங்கத்
தீதுபட்டதுகுருகுலச் செல்வமென்றிரங்கி
ஏதுபட்டனமுனிவரர் முதலினோரிதயம்.

     (இ-ள்.) முனிவரர் முதலினோர் இதயம் - சிறந்த இருடிகள்
முதலானவர்களுடைய மனங்கள், 'போது பட்டு - பொழுது சாய [சூரியன்
அஸ்தமிக்க], இருள்  புகுந்து - இருள் வர, ஒளி போன - ஒளி நீங்கிய, வான்
அகம் போல்-ஆகாயம்போல, மாது பட்ட பார் மடந்தை தன் மதி முகம் மழுங்க
- அழகுபொருந்திய பூமிதேவியினது சந்திரன்போன்ற முகம் ஒளிமழுங்கும்படி,
குருகுலம் செல்வம் தீதுபட்டது - குருகுலத்தினது செல்வம் பழுதுபட்டது,'
என்று-, இரங்கி - விசனமுற்று, ஏது பட்டன - என்ன பாடுபட்டன! (எ-று.)