ளென்பதுபற்றி ஒரு பெண்ணின் பின்னே செல்வது, ஆடவர்க்கு ஆண்மை போதும்ஓ - புருஷர்க்கு உரியஆண்திறமைக்குத் தகுமோ?[தகாதென்றபடி]; வரைக்கண் வாழ்வு கூர் நும்முன் - மலையில் வாழ்தல்பொருந்திய உன்தமையன், எம்முன் மலைய எண்ணி மேல் வந்தபோது - எமது எதிரே போர்செய்யக்கருதி எம் மேல் எதிர்த்து வரும்பொழுது, பார் - (நீ) காண்பாய்; அரக்கன் ஆகில் என் அவுணன் ஆகில் என் - இராக்கதனானாலென்ன அசுரனானாலென்ன? அவனை ஓர் கணத்து ஆவிகொள்வன்- அவனை ஒருகணப்பொழுதிலே உயிர்கவர்வேன்; (எ -று.) 'அரக்கனாகிலென் அவுணனாகிலென்' என்றது, அலக்ஷ்யத்தாற் கூறினது. அரக்கர், அவுணர் - பதினெட்டுத் தேவகணங்களுட் கொடிய சிலவகை, ஈற்று ஏகாரம் - தேற்றம்; மற்ற ஏகாரங்கள் - அசை (418) 9.- இதுவும், அடுத்தகவியும் - இடிம்பன்தன்மையும் வரவுங்கூறும். இடிம்பைதன்மனங்கொண்டகாளையிங் கிவையியம்பலுந் நவையிடிம்பனும், கொடும்பெருஞ்சினங்கதுவுகண்ணினன் குருதிநாறுபுண் கூரெயிற்றினன், உடம்புபெற்றதோரிருண்முகத்திலே யோரிரண்டு வெஞ்சுடருதிக்கவும், நெடும்பிறைக்கொழுந்தோரிரண்டுவா ணிலவெறிக்கவுந் நின்றநீர்மையான். |
(இ-ள்.) இடிம்பை தன் மனம் கொண்ட காளை - இடிம்பையினது மனத்தை(த் தனது அழகினாற்) கவர்ந்த இளவீரனான வீமன், இங்கு இவை இயம்பலும் - கீழ்க்கூறிய இவ்வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிரா நின்றவளவிலே, கொடு பெருஞ்சினம்கதுவு கண்ணினன் - கொடியபெரிய கோபக்கனல் வெளித்தோன்றும் கண்களையுடையவனும், குருதி நாறு புண் கூர் எயிற்றினன் - இரத்தம்நாறப்பெற்ற தசைதோய்ந்த கோரதந்தங்களையுடையவனும், (அதனால்), ஓர் உடம்புபெற்றது இருள் - ஒருபுருஷவடிவத்தைப்பெற்ற இருளானது, முகத்திலே - (தன்) முகத்திலே, ஓர் இரண்டு வெம்சுடர் உதிக்கஉம் - வெவ்விய சூரியர் இருவர் தோன்றிவிளங்கவும், நெடு பிறைகொழுந்து ஓர் இரண்டு வாள் நிலவு எறிக்கஉம் - நீண்ட இளம்பிறைகளிரண்டு ஒளியுள்ள நிலாவை வீசவும், நின்ற - நின்றாற்போன்ற, நீர்மையான் - தன்மையையுடையவனாகிய, நவை இடிம்பன்உம் - குற்றங்களையேயுடைய இடிம்பனென்பவனும்,- (எ-று.) - 'கூவிக் குறுகினான்' என வருங்கவியோடு முடியும். பின்னிரண்டடி - இல்பொருளுவமை. அவ்வரக்கனது மிகக்கரிய வடிவத்தை உடம்புபெற்ற இருளாகவும், அவன்முகத்திலுள்ள கோபாக்கினிச் சுவாலை வீசுகிற கொடிய சிவந்த இரண்டுகண்களை இரண்டு சூரியராகவும், அவனது கடைவாயில் வெளிப்பட்டு விளங்குகிற வளைந்தவெண்மையான இரண்டு கோரப்பற்களை இரண்டு பிறைகளாகவுங் குறித்தார்; இதனை, தன்மைத்தற்குறிப் பேற்றமென்னலாம். குருதியும்தசையும், தின்ற உடம்புகளினின்று பற்றியவை. 'புன்கூர்' 'வானிலவு' எனவும் பாடம். (419) |