பக்கம் எண் :

வேத்திரகீயச் சருக்கம்249

அரக்கன் நின்ற உழி அறிய - பகன்நின்ற இடத்தை அறியும் பொருட்டு,
அண்டர் அண்டம் முகடு உற வளர்ந்தனன் - தேவர்கள் வசிக்கிற
அண்டகோளத்தின்மேலிடத்தை அளாவ நிமிர்ந்தான்;

     திரிவிக்கிரமனைப்போலவளர்ந்தானென்றுகொள்ளற்க: அரக்கனிருக்குமிடம்
காண ஓங்கியதை உயர்வுநவிற்சியாற் கூறியதென்க. செந்நிறமுள்ள மலர் துகில்
கலவைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு விளங்குகிற வீமனுடைய
பருத்தவடிவத்துக்கு, சூரிய மண்டலம் உவமை. சூரியனுக்கு அடல் - நெடுந்தூரம்
ஒளியைச் செலுத்தி இருளை அறக்கெடுக்கும் வலிமை. கண்களாற்கண்டு
மனங்களித்தலையே கண்ணின்மே லேற்றி 'கண்களிக்க' என்றார்: இது,
ஒருபொருளின் வினையை மற்றொரு பொருளின்மேலேற்றிக் கூறும்
உபசாரவழக்கு. பேயிரதம் - பேய்த்தேர்.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினைந்து கவிகள் - பெரும்பாலும்
ஒன்று மூன்று ஐந்தாஞ்மாச்சீர்களும்  ஏழாஞ்சீர் விளச்சீரும்மற்றயவை
விளங்காய்ச்சீர்களுமாகிய எழுசீராசரியவிருத்தங்கள்.                  (461)

52.-இதுமுதல் மூன்று கவிகள் - ஒருதொடர்: வீமன் பகனைக்
காணுதலும், சோற்றை உண்ணுதலும்.

களித்தவெற்புதவுநீலமாநதி யடுத்தகுன்றிலொருகழிமுழைத்
தெளிந்தபற்களொடுநாவைமென்றுநனிதின்றுவெம்பசி
                                       கொடீயினால்
முளிந்துமுற்றுமனம்வேவவேவநெடுமூச்செறிந்துபுகைமுகனுடன்[ன்.
விளிந்ததொத்துவழிகுழியநின்றுசுழல்விழிநிரைத்தயரும்வெகுளியா

மூன்று கவிகள் - ஒரு தொடர்.

     (இ-ள்.) களிந்தம் வெற்பு உதவு - களிந்தமலையினாற் பெறப்பட்ட, நீலம்
மா நதி - நீலநிறமுடைய பெரிய யமுனாநதியை, அடுத்த - அடுத்துள்ள, குன்றில்
- ஒருமலையிலே, ஒரு கழி முழை - ஒருபெரிய குகையிலே, கொள் வெம் பசி
தீயினால் - (தான்) கொண்ட கொடிய பசியாகிய வயிற்றழிலினால், தெளிந்த
பற்களொடு நாவை நனி மென்று தின்று - வெண்மையாய் விளங்குகிற
பற்களொடு நாக்கை மிகுதியாக மென்றுதின்றுகொண்டு, மனம் முற்றுஉம் முளிந்து
வேவ வேவ - (இன்னும் இரைவாராமையா லாகிய கோபத்தால்) மனம்
முழுவதும் காய்ந்து மிகவும் வேவ,  நெடு மூச்சுஎறிந்து-பெரு மூச்சு
விட்டுக்கொண்டு, புகை முகனுடன் - புகை வெளிக்கிளம்பப்பெற்ற முகத்தோடு,
விளிந்தது ஒத்து வழி குழியநின்று - மறிந்தாற்போல (த் தான் செல்லும்) வழியும்
குழிபடும்படிநின்று, சுழல் விழி நிரைத்து - சுழலுகிற கண்ணின் நோக்கங்களை
எல்லாப்புறமுஞ் செலுத்தி, அயரும் வெகுளியான்-(தன்னையும்)   மறந்த   
கோபத்தை   யுடையவனாய்,- (எ-று) "உற்றுநின்றநிலை" (53) என்க. 'முழை'
என்றதற்கும் 'உற்றுநின்ற' என்பதே முடிக்குஞ்சொல்.

     அரக்கன் தன்மையை இனிது வருணித்தது, தன்மைநவிற்சியணி. களித்த
மலையினின்று உற்பத்தியாதலால், யமுனைக்கு, 'காளிந் தீ' என்றுபெயர்;
அந்நதியின்நீர், நீலநிறமுடையது. விளிதல் - பூகம்பம் முதலிய காரணங்களால்
தரை இயல்புகெடுதல். கழி - உரிச்சொல்.