மகிழ்ந்து, புனல் ஓடையின் குழுமி - நீர் ஓடையில் திரளுதல்போல ஒன்றுகூடி, நனி வியந்து - மிகவும் கொண்டாடி, இசை விளம்பினார்- (அந்தவீமசேனனுடைய) புகழைக் கூறினார்கள்; (எ -று.) துஷ்டநிக்கிரகஞ்செய்து சிஷ்டரைப்பரிபாலிக்குஞ் செயல்இவ்வீமனுக்கும் இருத்தலால், 'மால்கொல் ' என்றனர். ஓடையில்புனல் திரண்டு தாமரைமலர் மலர்ந்திருத்தல்போல, இந்நகரில் சனங்கள் திரண்டு மகிழ்ச்சியால் தம் கண்கள் மலர்ந்திருந்தன ரென்க. (475) வேத்திரகீயச்சருக்கம் முற்றிற்று. ------ ஐந்தாவது திரௌபதி மாலையிட்ட சருக்கம.் திரௌபதியானவள் விவாகத்துக்குஉரிய பூமாலையை அருச்சுனனுடையதோள்களிலிட்ட செய்தியைக் கூறுகின்ற சருக்க மென்று பொருள். அருச்சுனனுக்கு உரிமைபூண்ட திரௌபதியைத் தாயின் சொற்படி பாண்டவர் ஐவரும் மணஞ்செய்துகொண்ட வரலாறு இச்சருக்கத்திற் கூறப்படுகின்றது. இச்சருக்கத்திற் கடவுள்வாழ்த்துச்செய்யுள் *காணப்படவில்லை. மானசிக மாத்திரமாகக் கடவுள்வணக்கம் நிகழ்ந்துவிட்ட தென்றாவது, கடவுள்வாழ்த்தாக நூலாசிரியராற் பாடப்பட்டதொரு செய்யுள் பிற்காலத்தில் ஏடெழுதுவோரால் எழுதாது விடப்பட்டு எஞ்சிய தென்றாவது கொள்க. 1.- கவிக்கூற்று: சருக்கத்துக்குத் தோற்றுவாய் செய்தல். இங்கிவ ரிவ்வா றிந்த விருக்கையி லிருக்கு நாளில் அங்கண்மா ஞால மெங்கு மரக்குமா ளிகையில் வீந்தார் பங்கமில் குணத்தான் மிக்க பாண்டவ ரென்று மாழ்கத் துங்கவேற் றுருப தன்றான் சூழ்ந்தது சொல்ல லுற்றாம். |
(இ-ள்.) இவர் - இப்பாண்டவர்கள், இ ஆறு - இந்தவிதமாய், இங்கு - இவ்விடத்தில் [வேத்திரகீயத்தில்], இந்த இருக்கையில் - கீழ்க்கூறிய அந்தணன் மாளிகையில,் இருக்கும் நாளில் - தங்கியிருகுங் காலத்தில்,- அம்கண் மா ஞாலம் எங்கும் - அழகிய இடமகன்ற பெரிய பூமிமுழுவதிலுமுள்ளோரெல்லோரும், பங்கம் இல் குணத்தால் மிக்க பாண்டவர் அரக்குமாளிகையில் வீந்தார் என்றுமாழ்க - 'குற்றமற்ற நற்குணங்களாற்சிறந்த பாண்டவர்கள் அரக்கு மாளிகையில் இறந்தார்கள்' என்றுகருதி மனம்வருந்த,- துங்கம் வேல் துருபதன் சூழ்ந்தது - சிறந்த வேலாயுதத்தையுடையதுருபத
* "குண்டலமிலங்கச்சங்குமாழியுங்குலவுகாந்தி மண்டலந்துதிக்குந்திங்களிரவிமேல்வடிவந்தூண்ட விண்டலத்திலங்குபீதவவுணனைவெறுத்துவீழ்த்த புண்டரிகங்கள்பூத்தபுயலினைப்போற்றிசெய்வாம்"என்கிற செய்யுளொன்று, இச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தாகச் சிலபிரதிகளிற் காணப்படுகிறது. |